பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, கன்னித் தொழுவம் 17眾醬17: ooru; பதிப்பகம்! மின்காற்று பட்டமாத்திரத்தில்,பார்வதியின் உள்ளமும் உடம்பும் இதம் அடைந்தன. அடையாறு பங்களாவில் ஒரு மணி நேரத்திற்குள் நடந்து முடிந்த- நடத்தி முடித்தஜீவநாடகத்தை கெட்ட தொரு கனவாகவே அவள் நினைத் தாள். கடமைக் காலத்தில் இனியும் அவன் நிமிஷங்களைக் கூடச்சொந்தப் படுத்திக்கொள்ள மாட்டாள். மேஜைமீது வட்டியும் முதலுமாக அலுவல்கள் அம்பாரமாகக் குவிந்து கிடந்தன! விற்பனையாளர்கள் என்கிற பெயர் பொருத்த மாகத் தான் இருக்கிறது! - கடனுக்கு வாங்கின புத்தகங் களை ரொக்கத்துக்கு விற்பனை செய்யும் இவர்கள் பணத் தைப் பதிப்பகத்திற்கு அனுப்ப மாட்டார்களோ? எதிர்ப் பக்கம் முதலாளியின் அறையை எட்டிப் பார்த்தாள். அழைப்பு வரவேஎழுந்து நடந்தாள். 'இப்பத்தான் வர்றிங்களா, பார்வதி? - உங்கஃ ப்ரண்ட் செந்தில் உங்களுக்கொசரம் ஃபோன் பண்ணிஞர் உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நித்திய கண்டம் பூரண ஆயுசு கணக்கிலே இப்படியே மாறி மாறி உடம் புக்கு, வந்தால், பாவம், நீங்க ஒண்டியாய் என்னதான் செய்வீங்க?" இப்ப தேவலாமா?” பார்வதி தலையை உலுக்கினாள்.

İ ł6

116