வாத்தியார் ஐயா 143
மடல் அடர்ந்து நிற்கும் பனை மரத்தில் பன நுங்கோ பழமோ இருக்கிறது. விடுவிடுவென்று ஏறினுேம், பறித்தோம், தின்றாேம் என்பதற்கு இல்லையே! எவ்வளவு கஷ்டப்பட்டு உடம்பிலே காயத்தை ஏற்றுக்கொண்டு காயைப் பறிக்கவேண்டும்! இல்லாவிட்டால் பனம்பழம் தானே விழும்வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான். பனமர வாத்தியாரால் மாளுக்கர்களுக்கு என்ன பிரயோசனம் இருக்கப் போகிறது?
தானே தரக்கொளின் அல்லது தன்பால்
மேவிக் கொளக்கொடா இடத்தது மடற்பன.
பருத்திக் குடுக்கை வாத்தியாரென்று ஒரு சாதியை இலக்கண நூலில் காணலாம். பழைய காலத்தில் சிக்கிமுக்கிக் கல்லால் நெருப்பு உண்டாக்கி வந்தார்கள். சிக்கிமுக்கிக் கல்லை உராயும்போது நெருப்புப் பொறி உண்டாகும். அதைப் பருத்தியிலே பற்றச் செய்து அதிலிருந்து தேங்காய் நார், உமி முதலியவைகளில் பற்ற வைப்பது வழக்கம். இந்தக் காரியத்துக்காக ஒரு குடுக்கையில் பருத்தியை அடைத்து வைத்திருப்பார்கள். அதிலிருந்து கொஞ் கங் கொஞ்சமாக அவ்வப்போது பஞ்சை எடுத்து உபயோகிப்பார்கள்.
பருத்திக் குடுக்கையில் பஞ்சை அடைப்பதும் கஷ்டம்; அதிலிருந்து எடுப்பதும் கஷ்டம். கொஞ்சங் கொஞ்சமாகத்தான் அடைக்கவேண்டும்; அப்படியே சிறிது சிறிதாகவே எடுக்கவேண்டும். பருத்திக் குடுக்கை வாத்தியாரிடத்தில் உள்ள படிப்பும் அந்தப் பஞ்சைப் போன்றதே. அவர் மூளை கொஞ்சங்