பக்கம்:கன்னித் தமிழ்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படி அளப்பது? 16.1

குற்றம் இல்லை. சொல்லுங்கள் கேட்கிறேன். வேண்டுமானல் கொஞ்சம் குளிர்ந்த தண்ணிர் கொண்டுவந்து வைத்துக்கொள்கிறேன்; மயக்கம் வந்தால் தெளித்து எழுப்பிவிடுங்கள்’ என்று வேடிக்கையாகச் சொல்வார் செங்கற்பட்டுக்காரர்.

“பன்னிரண்டாயிரம் முதல் பதினையாயிரம் வரையில் ஏகர் விலைபோகிறது. மகா மட்டமான நில மாக இருந்தாலும் எண்ணுயிரத்துக்குக் குறைவில்லை.” இத்தகைய பேச்சினிடையே நிலத்தின் பெரு மையை அளக்கிற விதம் எப்படி இருக்கிறது? எல் லாம் ரூபா அணு பைசாதான்.

நிலத்தை விளைநிலமாக எண்ணுமல் விலை நில மாக எண்ணும் மோசமான நிலை இந்த நாட்டுக்கு வந்துவிட்டது. நாணயம் என்ற பேய், மனிதன் மன சிலே புகுந்து பொருள்களின் மதிப்பை மாற்றி விடு கிறது. ஏறிய விலக்கு விற்கிறதென்று எண்ணி, தலை முறை தலைமுறையாக வந்த நிலங்களைச்.சிலர் விற்று விட்டர்கள். காரணம் என்ன? அவர்கள் துங்கள் நிலத் தைப் பணத்தால் அளக்கிறார்கள். முன்பு அங்கிருந்த

வும், இனி மறுபடியும் சுருங்கிவிடுமென்றும் எண்ணு கிறார்கள்; சூட்டோடு சூடாக விற்றுவிடத் துணி கிறார்கள்.

நெல் விளையும் பூமியைவிடப் புகையிலை-விளையும் பூமி உயர்ந்ததாகிவிட்டது. நெல்லைக் காட்டிலும் புகை யிலை உயர்ந்ததா? அல்ல, அல்ல. நெல்லால் வரும் பணத்தைக் காட்டிலும் புகையிலையால் வரும் பணம் அதிகம் அல்லவா? அப்படியால்ை ஒன்றுமே விளை, 1 1 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/169&oldid=612879" இலிருந்து மீள்விக்கப்பட்டது