மோதிய கண் 185
பெருக்கவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. எண்ணம் அவாவாக வளர்ந்தவுடன் அதற்குரிய ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கின்ை.
பொருளை ஈட்டுவதற்கு வேறு ஊர்களுக்குச் செல்லவேண்டும். வேற்று நாட்டுக்கும் செல்ல வேண்டி யிருக்கும். சில மாதங்கள் தன் காதலியைப் பிரிந்து வாழவேண்டி நேரும். ஒரு கணமேனும் பிரியாமல் வாழ்பவர்கள் அவர்கள்; உடலும் உயிரும் போல ஒன்றி இன்ப வாழ்விலே ஈடுபட்டவர்கள். பிரிவுத் துன்பத்தை அவர்கள் இன்னும் உணரவில்லை. காதலியைப் பிரிந்து சென்றால் அந்தப் பிரிவை அவள் தாங்குவாளா? அவன்தான் தாங்குவான?
அவள் நினைவு அவனுக்கு இனிமையைத் தரும். போன இடங்களில் அவளை நினைந்து மகிழலாம். ஆனாலும் நேருக்கு நேரே காண்பது போல ஆகுமா? அவளுடைய பேரழகு அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அந்த அழகைப் பார்த்து மகிழாத நாளும் ஒரு நாளா?
மீண்டும் பொருளின் நினைவு அவனுக்கு வந்தது. பொருள் இருந்தால் போகமும் உடன் வரும். தன் உயிர்க் காதலிக்கு வேண்டிய அணிவகைகளையும் ஆடைவகைகளையும் வாங்கிப் புனையலாம். மாளிகை கட்டலாம். வாகனம் பெறலாம். அறம் செய்து புகழ் பெறலாம். ஆதலின் பொருள் அவசியந்தான்.
இவ்வாறு ஒன்றுக்கொன்று மாறுபட்ட எண்ணங் கள் அவன் உள்ளத்திலே போராடிக் கொண். டிருந்தன. பொருள் வேண்டுமென்றால் காதலியோடு