கம்பர் முகந்தது 215.
பண்கள் வாய் மிழற்றும் இன்சொற் கடைசியர் பரந்து நீண்ட கண்கைகால் முகம்வாய் ஒக்கும்
களையலால் களையி லாமை உண்கள்வார் கடைவாய் மள்ளர்
களேகலா துலவி நிற்பார்; பெண்கள்பால் வைத்த நேயம்
பிழைப்பரோ சிறியர் பெற்றால்? (கடைசியர் - மள்ளருடைய மனேவிமார். இலாமை . இல்லாமல், உண். கள் வார் கடைவாய் - தாம் உண்ட கள் ஒழுகுகின்ற கடைவாயை உடைய மள்ளர் - உழவர். களே கலாது - களேயாமல்.)
★
பதுமை என்பவள் தூங்கிக் கொண்டிருந்தபோது சீவகன் அவளைப் பிரிந்து போய்விடுகிருன். கண் விழித்த பதுமை, தன் அரும்பெறற் காதலனைக் காணுமல் வருந்துகிருள்; கண்ட கண்ட பொருள் களை யெல்லாம் பார்த்துப் புலம்புகிருள்; கிளியையும் பூவையையும் அன்னத்தையும் மயிலையும் விளக்கையும் மாடத்தையும் விளித்து என்ன என்னவோ சொல் கிருள்.
மயிலைக் கண்டாள். அதன் தோகையிலேதான் எத்தனை கண்கள்! அவள் கயற் கண்ணினுள்; அந்தக் கண்ணை மூடித் தூங்கிப் போளுள். அப்போது சீவகன் பிரிந்து மறைந்தான். மயிலினுடைய கண், மூடாத கண் அல்லவா? அத்தனை கண்களில் ஒன்றா வது அவனைப் பார்த்திராதா? அவன் எந்த வழியாகப் போனன் என்று தெரிந்து கொண்டிராதா?-பாவம்