இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52
கன்னித் தமிழ்
அகத்தியத்தில் பண்களையும் திறங்களையும் பற்றிய இலக்கணங்கள் இருந்தன என்பதற்கு இது சாட்சி யாக நிற்கிறது. - -
அவைதாம், சாந்திக் கூத்தும்
விநோதக் கூத்தும்என்று ஆய்ந்துற வகுத்தனன் அகத்தியன் ருனே என்பது போன்ற சூத்திரங்களிலிருந்து கூத்திலக்க ணத்தையும் அகத்தியர் இயற்றினரென்று தெரிய வருகிறது.
தமிழர் அவர் காலத்தில் பண்ணும் திறமும் பயின்ற இசையிலே வல்லவராகி, பல்வகைக் கூத்தும் ஆடி, அவற்றுக்கு இலக்கணமும் வகுத்துக் கொண்ட னர் என்ற செய்தியையும் அறிகிருேம்.