பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



202 கமலாம்பாள் சரித்திரம் யாரார் என்ன பூஜை பண்ணினார்களோ அதுதானே கிடைக்கும்' என்று சொல்லியழுவாள். அவள் ஏதோ ஒரு மாதிரியாக இருப்பதாக மட்டும் எல்லாருக்கும் பட்டது. ஆனால் அது இன்னதென்று ஒருவரும் அறியவில்லை. சுப்பிரமணியய்யர் அழுதுகொண்டே . பிராணனை விட்டார். முத்துஸ்வாமியய்யர் மூர்ச்சை போட்டு விழுந்தார். ஊரெல்லாம் ஒரே மொத்தமாய் அழ முத்துஸ்வாமியய்யர் மூர்ச்சை தெளிந்து எழுந்த பிறகு, செய்யவேண்டிய காரியங்களெல்லாம் விதிப் படி நடத்தப்பட்டன.