பக்கம்:கம்பனும் வால்மீகியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயர்திரு. கே ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தனது “A History of South India- தென்னிந்திய வரலாறு" என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"A greater Poet than Kuthan was Kamban, the celebrated Author of amil Ramayanam or Ramaratharam who flourised in the Reign of King Kulothunga III. this Poem is the greatest epic in Tamil Literature and though the another states that he follows in the wake of valkiki, still his work is no translation or even adoptatin of the sanskirit original. Like the other great poets who have enriched the literatures of the different languages of India by their works on the Rama Saga, Kamban imports into his narration the colour of his own time and place". {A History of South India K.A. Neelakanta Sastri, M.A., Oxford University Press- Page 377} {கூத்தனைக் காட்டிலும் மிகப் பெரிய புலவன்கம்பன். அவன் தமிழில் மிகவும் பிரபலமான புகழ்மிக்க இராமாயணம் அல்லது இராமவதாரம் என்னும் மகா காவியத்தை எழுதிய ஆசிரியன். மூன்றாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் அவன் மிகவும் பிரபலமடைந்து விளங்கியிருந்தான், இந்தக்காவியம் தமிழ் இலக்கியத்தில் மகிச் சிறந்த இதிகாச நூலாகும். வால்மீகியைப்பின் பற்றி இந்தக் காவியத்தைப் பாடியதாகக் கம்பன் கூறிய போதிலும் அது சமஸ்கிருத மூலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதோ அல்லது தழுவியதோ கூட அல்ல. இராமனின் சிறப்பைக் கூறும் காவியங்களை எழுதிய இதர பெரிய கவிஞர்களும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் அவற்றின் இலக்கியங்களைச் செழுமைப்படுத்தியதைப் போலக் கம்பனும் தனது சொந்த இடத்தையும் காலத்தையும் வெளிப்படுத்தும் சாயல்களைக் கொண்ட சிறந்த கருத்துக்கள் நிறைந்த கவிதைகளை முன் வைத்து மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளான்.

எனவே, கம்பனுடைய தமிழ்க் கவிதைகள், வால்மீகியின் மூல காவியத்தையும் விஞ்சி மிகச் சிறந்த காவியமாக தமிழ்ப்பேரிலக் கியங்களில் தனிப்பெரும் இலக்கியமாக வளமான தமிழ்ச் சொற்களும்,