பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கம்பன் எடுத்த முத்துக்கள் எல்லையற்ற அன்பினால் மூண்டதுதான் இந்தச் சினம். இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், நடைபெற்றுவிட்ட செயலின் அடித்தளம் எங்கே இருக்கிறது, அதனுடைய ஆணிவேர் எங்கே இருக்கிறது என்பதைத் தன் முன்கோபம் காரணமாக இலக்குவன் அறிந்துகொள்ள மறுக்கிறான். இந்த அளவில் மேலே இருக்கின்ற நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்து அவற்றைச் செய்கின்றவர்மேல் சினங்கொள்கிறான். எய்தவன் இருக்க அம்பை நோவது போல், கைகேயி, பரதன் ஆகிய இருவர்மீதும் சீற்றம் கொள்கிறான். இதன் மூல காரணம் எங்கே உள்ளது என்பதைப்பற்றி அவன் கவலைப்படவே யில்லை. இராகவன் தன் கூர்த்த மதியால் அதனை எடுத்துச் சொன்னபோதும் இலக்குவன் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை. - இறுதியாக இலக்குவனை அடக்குவதற்கு இராகவன் ஏவுகின்ற பிரம்மாஸ்திரம் வியப்புக்குரிய தாகும். - - - "நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்த்த தாதை தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்; என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஊற்றம்" (1741) "தந்தையின் சொல்லைக் கேட்பது எனது கடமை. என் சொல்லைக் கேட்பது உனது கடமை. என் சொல்லை மீறினால் அதனால் உனக்கு வரப்போகின்ற இலாபம் என்ன?" என்று சொன்னவுடனே, கொதித்துப் பொங்கிவருகின்ற பாலில் ஒரு சொட்டுத் தண்ணிர் விட்டவுடன் எப்படி அடங்கிவிடுகின்றதோ அதுபோல இலக்குவன் சீற்றம் எப்படி அடங்கிவிடுவதைக் காண்கின்றோம். இராகவனுடைய ஒரு சொல்லுக்கு, இலக்குவன் தன் வாழ்க்கையையே தன் எண்ணத்தையே தான் கொண்டிருந்த குறிக்கோளையே பலியாக்கிவிடுகிறான். இராமன் மாட்டு அவன் கொண்டிருந்த மாபெரும் அன்பை எடுத்துக் காட்டக் கவிச்சக்கரவர்த்தி இதனைப் பயன்படுத்துகின்றான்.