பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f30 கம்பன் எடுத்த முத்துக்கள் g)60am Bgi geogp5uoirefli (co-ordinated action) LiamifiGloruju வேண்டிய சூழ்நிலைக்குக் கவந்தன் வதை முன்னோடியாகும். சகோதரர்கள் இருவரும் மாபெரும் வடிவுடைய கவந்தனின் தோள்கள்மேல் ஒரே நேரத்தில் ஏறி, ஒரே நேரத்தில் அவனுடைய இருதோள்கிளையும் வெட்டி வீழ்த்துகின்றனர். இதற்கு அப்பாலும் இப்படலத்தில் ஒரு சிறப்பு உண்டு. இப்படியே பெண்ணைத் தேடிக்கொண்டு இருவரும் சென்றால், கிட்கிந்தையைக் கடக்க நேரிடும். வாலி இவர்களைச் சந்தித்தால் அவதார நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, கந்தருவ வடிவில் தோன்றிய கவந்தன், இரலைக் குன்றில் அஞ்சி வாழும் சுக்கிரீவனிடம் செல்லுமாறு வழி கூறுகிறான். அன்றியும், இடையே மதங் காசிரமத்தில் சவரியைப் பற்றியும் கூறி, அவளைச் சென்று சந்திக்குமாறு பரிந்துரை செய்கிறான். இவன் இவ்வாறு கூறும்பொழுது சகோதரர்கள் பெருமை அறியாது குரங்குப் படைகளை உதவிக்கு அழைத்துக்கொள்ளப் பரிந்துரை செய்தான் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. இதனை மனத்துட் கொண்ட கவந்தன் ஐயனே ! உனக்கு எவ்விதத் துணையும் தேவையில்லை, என்றாலும், ஒன்று கேள். திரிபுரம் எரிந்த விரிசடைக் கடவுள் தன் கணங்களையெல்லாம் படைகளாக்கி அழைத்துச் சென்றான் என்று எடுத்துக் காட்டிக் கூறுவதில் ஒரு நயம் உள்ளளது. மேருவை வில்லாகவும் உலகைத் தேராகவும், கணங்களைப் படைகளாகவும் கொண்டு சென்றான். எனினும் இவற்றுன் ஒன்றின் உதவி கூட இல்லாமல் திரிபுர சம்ஹாரம் செய்தான். இந்த உதாரணத்தினால் 'குரங்குப் படைகள் உடனிருப்பது உன்னைக் காப்பதற்கல்ல. நீ ஒருவனே இராவண வதம் செய்யப்போகின்றாய், என்றாலும், அப்படை உடனிருப்பது பொருத்தமானதாகும் என்ற கருத்து கவந்தன் சொற்களில் வெளிப்படுகிறது. - அடுத்துள்ள சவரிப் படல்ம், சவரி பிறப்பு நீங்கு படலம் எனப் பெயர் பெறும் சரபங்கன், சவரி என்ற இருவரையும் இராகவன் தானே தேடிச் செல்கிறான். ஞானியாகிய சரபங்கனும், கல்வி அறிவின்றேனும் ஒப்பற்ற பக்தையாகிய