பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் {55 அமைந்தது. அதே போல மகாகவி பாரதியாரைப் பொறுத்தமட்டில் மாங்கொட்டைச் சாமி என்ற சித்தர், "முட்டாள் அழுக்குமூட்டையை நீ உள்ளே சுமக்கிறாய்; நான் வெளியே சுமக்கிறேன், போடா" என்று கூறிய சொற்களே மந்திரமாக அமைந்து, பாரதியின் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தைத் தந்தன. "சும்மா இரு சொல் அற” என்பதும், "நான் வெளியே கமக்கிறேன் போடா” என்பது எப்பொழுது, எப்படி மந்திரம் ஆகின்றன? இச்சொற்களைக் கூறியவர்கள் நம்மைப் போன்ற குறைமொழி மாந்தர்கள் அல்லர். அவர்கள் நிறைமொழி மாந்தர்களாவர். அவர்கள் ஆணையால் இந்தச் சாதாரணச் சொற்கள் மறைமொழியாக, அதாவது மாபெரும் சக்தி ஊட்டப் பெற்ற மந்திரங்களாக மாறிவிட்டன. சக்தியூட்டப் பெற்ற மந்திரங்கள் எப்பொழுது அந்தச் சக்தியை வெளிப்படுத்துகின்றன? இச்சொற்கள் சென்று சேரும் இடம் பக்குவப்பட்ட ஆன்மாக்களாக இருப்பின், இவை மந்திரங்களாக மாறி ஆன்மாக்களை வழி நடத்துகின்றன. ஓர் ஆன்மா நல்முறையில் பக்குவப்பட்டிருப்பின் அந்தச் சொல்லையும் மந்திரமாக மாற்றி நிறைமொழி மாந்தராகிய குருமார்கள் அம் மந்திரச் சொற்களையே உபதேசமாக மாற்றிவிடுவர். இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால் ம.ராபோ போன்றவர்களின் விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியும். இந்த விளக்கத்தின் உயிர்நாடி. . முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, முறை இலோயைத் தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினான்; "செருவில், 金德 நீயும், அன்பினை உயிருக்கு ஆகி, அடைக்கலம் யானும், என்றி" என்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது . - என்றான். (4059) என்ற பாடலின் மூன்றாவது அடியில் உள்ளது. இம் மூன்றாவது அடியிலுள்ள என்றி என்ற சொல்லை, என்பது கருதி என்ற வினை எச்சத்தோடு தொடர்புபடுத்தி என்று சொல்லிவிடுவாயோ என்பது கருதி என்றுதான் அனைவரும் பொருள் கூறியுள்ளனர். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு