பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 கம்பன் எடுத்த முத்துக்கள் இப்பொருள் நியாயமானதே ஆகும். வாலியைப் பொறுத்த மட்டில் அவன் காதுகளில் விழுந்த இந்தச் சொற்களுக்கு இப்படித்தான் பொருள் கொண்டிருப்பான். காதில் விழுந்த சொற்களுக்கு அறிவு பொருள் செய்துகொள்ளும் முறை இதுதான். இவ்வாறு பொருள் கொள்ளும்போது புறமணத்தில் இச்சொற்களின் பொருள் இவ்வாறுதான் படுகிறது. அப்படியானால், 'அன்ன கட்டுரை கருத்துள் கொண்டான்' என்ற சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. வாலியைப் பொறுத்தமட்டில் முதலில் காதின் வழிப் புகுந்த சொற்கள் நாம் கூறும் அதே பொருளைத்தான் தந்தன. ஆனால், இந்த நேரத்தே வாலி அகமனத்தில் முழு வளர்ச்சி பெற்றவன் ஆகிவிட்டான். ஸ்பரிச தீட்சை, நயன் தீட்சை என்ற இரண்டும் பெற்று அந்த ஆன்மா வளர்ச்சியடைந்து குருவின் ஒரு சொல்லுக்காக (மந்திர உபதேசத்திற்காகக் காத்துக்கொண்டு நிற்கிறது. அந்தச் சொல் இலக்குவன் என்ற குருவின் மூலமாக வழங்கப்படுகிறது. இப்பொழுது அந்த மூன்றாவது அடியினைச் சிந்தனைக்குக் கொண்டு வந்தால் வேறு பொருள் தொனிப்பதைக் காண முடியும். - அன்பினை உயிருக்கு ஆகி, அடைக்கலம் யானும் என்றி - இதன் பொருள் வருமாறு: உடலை விட்டுப் பிரிந்துபோகப் போகின்ற உன் உயிருக்கு இவ் உடம்பு இருககுமபொழுதே ந அனபுடையவனாக இருததல் வேணடும. உடலோடு இருக்கும்வர்ைதான் உயிரின வளர்ச்சியைக் காண முடியும். ஆகவே, இப்பொழுது உன் உயிருக்கு நிறைந்த அன்பினைச் செலுத்துவாய் ஆக அப்படிச் செலுத்த வேண்டுமேயானால், அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. கிடைத்தற்கரிய ஒரு சந்தர்ப்பம் உனக்குக் கிடைத்திருக்கிறது. மூலப்பொருள் உன் எதிரே நிற்கின்றது. அப்பொருளினிடத்து 'அடைக்கலம் யானும் என்றி'. யான் உன்னிடம் அடைக்கலமாக வந்துள்ளேன் என்பாயாக இவ்வாறு பொருள் கொண்கையில் என்றி என்பது என்பாயாக’ என்ற வியங்கோள் பொருளில் பொருள் பண்ணப்பட வேண்டும். சாதாரண முறையில் பொருள் செய்யும்போது என்று சொல்வாயேயானால் என்று பொருள்படும். மந்திரமாகும்