பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 163 சொற்களால் எந்த இராமனைச் சாடினானோ அதே ராமனை 'உயிர்கட்குத் தாய் போன்றவன்', 'சாத்திரங்களின் அறநெறியில் நிற்பவன்' என்றெல்லாம் பேசத் தொடங்குகிறான். தாய்என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும் நீ என நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே? தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான். 406) சில வினாடிகளுக்குமுன்னர் அம்பின்மூலம் தன் உயிரைப் போக்கி நிற்கும் ஒருவனைப் பார்த்து உயிரைக் காப்பதில் தாய் போன்றவனே! தருமம், சால்பு உடைமை என்பவற்றின் மொத்த உருவாக உள்ளவனே! என எப்படிக் கூற முடிந்தது; குழந்தையின் தேவைக்கு அவசியமானால் அக்குழந்தையின் கால்கைகளைப் பிடித்துக்கொண்டு தாங்கமுடியாத கசப்பு மருந்தைப் புகட்டுவதைக் காண்கிறோம். கசப்பு மருந்தைப் புகட்டுவதால் தாய் அன்பில்லாதவள். என்று கூறுவது எவ்வளவு அறிவீனமோ அவ்வளவு அறிவீனமானது இராமன் செயலைக் குறை கூறுவது. கசப்பு மருந்து குழந்தையின் நோயைப் போக்கி வாழ வைக்கின்றது. வாலியைப் பற்றியிருந்த நோய்கள் பல கல்வி கேள்விகளால் வந்த ஆணவம், தோளினால் வந்த ஆணவம் (3823), உலைவுஇல் பூதம் நான்கு உடைய ஆற்றலினால் (3824) வந்த ஆணவம், பொரக் கிட்டுவாரின் வலிமை பாகம் எய்துவதனால் வந்த ஆணவம் (3825). இவை அனைத்தையும்விட, 'நான் இறைவனுக்குப் பணி செய்கின்றேன்' என்ற எண்ணத்தால், அதாவது அட்டமூர்த்தி தாள் பணியும் ஆற்றலால் (3825) வந்த ஆணவம் ஆகிய பல நோய்கள் அவனைப் பற்றியிருந்தன. உடல் வன்மை உடையவர்களின் உள்ளே இருந்து அரிக்கும் நோய்களை எளிதில் அறிந்துகொள்ள முடியாது. மருத்துவன். ஒருவனே அறிய முடியும். ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குற்றங்களில் கன்மம், மாயை என்ற குற்றங்கள் வாலியைப் பற்றவில்லை. ஆனால், அவனையும் அறியாமல் அகந்தை என்ற கிழக்கு அவனுள் வேரோடித் தழைத்து நின்றது.