பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 - கம்பன் எடுத்த முத்துக்கள் தன்னலம் என்பது கடுகளவும் இல்லையென்பதை வாலி உணர்ந்து பேசுகிறான். அடுத்து வரும், தங்கள் வில் அறம்' என்னும் சொல் நன்கு சிந்திக்கத்தக்கது. குரங்குச் சண்டையில் கடித்தல், கையை மடக்கிக் குத்துதல், எட்டி எறிதல் என்பன போன்ற பலவகை உண்டேனும் வில்லெடுத்துப் போர் செய்தல் இல்லை. வானரங்கள் கையாண்ட கருவிகள் இவையென்பதைச் சுடடும் ஒரு பாடல் உள்ளது: பல்கொடும், நெடும் பாதவம் பற்றியும் கல்கொடும் சென்றது - அக் கவியின் கடல். எதிர்த்துப் போரிடும் அரக்கர் சேனை கையாண்ட கருவிகளை மேற்குறித்த பாடலின் பின் இரண்டு வரிகள் குறிக்கின்றன. வில்கொடும், நெடு வேல் கொடும், வேறு உள எல்கொடும் படையும் கொண்டது . இக் கடல் (7035) எனவே, வில்லெடுத்துப் போர் செய்தல் என்பது மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அரக்கர்கட்கும் உரியதாகும் என்பதை வாலி ஒப்புக்கொள்கிறான். அரக்கர் விற்போரில் அறவழி நின்று போர் புரிவர் என்று கூறமுடியாது. இந்திரசித்தன் மறைந்து நின்று போர் புரிவது இதற்கு எடுத்துக்காட்டாகும். எனவே, அவர்களைப் பொறுத்தமட்டில் வில் அறம் என்று ஒன்றும் கிடையாது. தேவர்கள் யுத்தத்தைப் பற்றி நாம் அறிய முடியாது. எனினும், அவர்களும் அறவழி நின்றே போர் புரிவர் என்று கொள்ளலாம். எஞ்சி நிற்பது மனிதர்கள் செய்யும் விற்போர்மட்டுமே யாகும். தாங்கள் மட்டுமே செய்யும் விற்போருக்குச் சில சட்டதிட்டங்களை வகுத்துக் கொண்டு, இதுதான் அறவழி நின்று செய்யப்படும் விற்போர் ஆகு மென்று உயர்ந்த பண்புடைய மனிதர்கள் வகுத்துக்கொண்ட சில அறவழிகள் உண்டு. அதனைத்தான் இங்கே வாலி தங்கள். வில் அறம்' என்ற சொற்களில் கூறுகின்றான். அப்படிக் கூறும்பொழுதுகூடக் கேவலமான குரங்குகளின் பொருட்டாக ஒரு மாமனிதன் இராமன்) வில் அறத்தைத் துறந்தானே என்ற கழிவிரக்கத்தில்தான்