பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 193 இவ்வாறு செய்வதில் ஒரு சங்கடமும் உண்டு. "தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்ப்பது போல” எவ்விதக் கைம்மாறும் கருதாமல் வாலியைக் கொன்று. தாரமொடு தலைமையும் தருகிறேன் என்று முன்வந்துள்ள இராகவனுக்கு ஒரு பரீட்சை வைத்தால், அதனை எப்படி ஏற்றுக்கொள்வானோ? அதனால் வருத்தம் அடைவானோ? சினம் கொள்வானோ? எனக்கே பரீட்சை வைக்கும் உங்கள் நட்பே வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்பன போன்ற ஐயங்கள் ஏனையோருக்கு இருந்திருக்கலாம். ஆனால், இறை இலக்கணத்தை நன்கு அறிந்திருந்த அனுமனுக்கு இந்த ஐயங்கள் எதுவும் எழவில்லை. இறைவனுடைய பல்வேறு குணங்களில், செளலப்பியம்’ என்று கூறப்படும் எளிவந்த தன்மையும் ஒன்றாகும். குழந்தை தந்தையை நோக்கி 'இந்தப் புத்தக முட்டையை உன்னால் துர்க்க முடியுமா என்று கேட்டால், எந்தத் தந்தையும் குழந்தையினிடம் கோபித்துக் கொள்ளமாட்டான். அதேபோல இராமனும் கோபித்துக் கொள்ளமாட்டான் என்ற எண்ணம் உடையவனாதலால், இராமனை ஐயப்படும் சுக்கிரிவனை நோக்கி, - - பிறிதும், அன்னவன் பெரு வலி ஆற்றலை, பெரியோய்! அறிதின்ன்னின், உண்டு உபாயமும்; அஃது அரு மரங்கள் நெறியில் நின்றன ஏழில், ஒன்று உருவ, இந் நெடியோன் பொறிகொள் வெஞ் சரம் போவது காண்!". (3863) என்று அனுமன் பேசுகிறான். அனுமன் பணிபுரிந்தது சுக்கிரீவனிடமே ஆகும். சுக்கிரீவனிடம் கொண்ட இராச விசுவாசத்தால் வாலியையும் பகைத்துக்கொண்டு வாழ்ந்தான் அனுமன். இராமனை நண்பனாகக் கொள்வதற்கும் அவன் உதவியைக் கொண்டு வாலியைக் கொல்வதற்கும் கிட்கிந்தை அரசை மீட்டுத் தருவதற்கும் சுக்கிரீவனுக்கு உதவி செய்த ஒரேயொருவன் அனுமனே ஆவான். அத்தகைய அனுமன் அருமை. பெருமைகளை, ஆற்றலை, நுண்மாண் துழைபுலத்தை ஒரு சிறிதும் அறிந்தவனாகச் சுக்கிரீவன் காணப்படவில்லை. தன்பால் நேயம் கொண்டு பணிபுரிந்த அனுமனை முழுவதும் 13