பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 203 நினைத்தான் (374 என்கிறான் கவிஞன். இராம பக்தனான அனுமன் சுரசை என்ற அரக்கியைப் பார்த்தவுடன் சினம் கொள்ளாமல் இருந்ததற்குக் காரணம் பெண்ணென நினைத்ததே ஆகும். சுரசையின் பேச்சிலிருந்து ஒன்றை அறிந்துகொள்கிறான், அனுமன். பெரும்பசியால் வாடுவதாக அவள் கூறுகிறாள். மானுடவர் குரக்கினத்தவர் ஆகிய அனைவருக்கும் பசி என்பது ஒன்றுதானே. எனவே, அரக்கியே யாயினும் பசி என்று கூறியவுடன் அனுமன் உருகி விடுகின்றான். "இப் புன்புலால் யாக்கையை உனக்கு இரையாக ஆக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், நான் மேற்கொண்டு வந்த காரியம் என் ஆண்டானுக்குச் செய்யும் தொண்டாகும். அத்தொண்டு நிறைவேறவேண்டுமானால் இந்த யாக்கை தேவைப்படுகிறது. அதை முடித்துவிட்டு யானே வந்து உனக்கு இரையாக ஆவேன்" என்ற பொருளில் பின்வருமாறு கூறுகிறான்: பெண்பால் ஒரு நீ பசிப் பிழை ஒறுக்க நொந்தாய்; உண்பாய் எனது ஆக்கையை, யான் உதவற்கு நேர்வல் - விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால், நண்பால் எனச் சொல்லினன், நல் அறிவாளன்; நக்காள் (4808) யான் மேற்கொண்ட வினையை முடித்துவிட்டு மீண்டால் "நண்பால் என் உடம்பை யானே உனக்கு உண்ணத் தருவேன என்று கூறும் ஒருவன் பண்புடைமையின் சிகரத்தை அடைந்தவனாகிறான். மூன்றாவதாக அனுமன் சந்திப்பது அங்காரதாரை எனும் அரக்கியை. இவளும் பெண்தான். அனுமனுடைய இயல்பை அறிந்திருந்த் அங்காரதாரை தான் யார் என்பதை அனுமனுக்குக் கூறத் தொடங்குகையிலேயே பெண்பால் எனக் கருது பெற்றி ஒழி' (482) என்று கூறிவிட்டாள். ஆதலின், அவள் வாயிடைப் புகுந்து குடலைக் கிழித்து வெளிவருவது அனுமனுக்கு எளிதாகிறது. இந்த இரண்டு செயல்களையும் செய்தபிறகு இது மாதிரி எத்தனை இடையூறுகள் வழியிலுண்டோ என்று நினைத்தான்