பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$. 64 கம்பன் எடுத்த முத்துக்கள் "மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்" (1514) என வளர்ந்துவிட்ட காரணத்தால், அவன் உயிர் போன்று இருக்கின்றவ னாகிய இராமன் காட்டுக்குப் போகிறான் என்று அறிந்தவுடனேயே மயக்கமடைகின்றான். எப்படியாவது திரும்பி வந்துவிடுவான் என்ற நைப்பாசையில் உயிரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கின்றான். தேரோட்டிச் சென்ற சுமந்திரன் இராமன், சீதை இலக்குவன் ஆகிய மூவரையும் விட்டுவிட்டு நகருக்குத் திரும்பி வந்துவிடுகின்றான். இரதம் திரும்பிவந்தது என்று கேள்விப்பட்டவுடன் தசரதன் மூர்ச்சை தெளிகின்றான். 'ஒருவேளை இராமன் வந்துவிட்டானோ என்று சுமந்திரனாகிய தேரோட்டியை அழைத்து, . 'விரன் வந்தனனோ' (1896) என்று கேட்கின்றான். தேர்வலானும் . "வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன் என்றான்" 898) அவ்வளவுதான். - . . . .” - - "போயின்ன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி . . போனான்" (1898) என்று கம்பன் முடிப்பான். இராமன் கானம் போய்விட்டான் என்று சொன்னவுடனேயே தசரதனுடைய ஆவி பிரிந்துவிட்டது என்று பேசுகிறான். - தன்னால் பேரன்பு செய்யப்பட்ட இராமன் எத்தகையவன், எத்தகைய பண்பு நலமுடையவன், என்ன குறிக்கோளுட்ையவன் என்பதையெல்லாம் தசரதன் நன்கு அறிந்திருந்தானா என்பது ஐயத்திற்குரியது. அறிந்திருப்பானே யானால் இராமன் மீண்டு வருவான் என்ற எண்ணத்திற்கு இடமே கொடுத்திருக்கமாட்டான். எனவே, தசரதன் இராமனை முழுவதுமாக அறிந்தான் என்று சொல்வதற்கில்லை. பரதனைப்பற்றியாவது தசரதன் அறிந்திருந்தானா என்றால், அதுவும் இல்லை.