பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 65 பரதனை நன்கு அறியாத காரணத்தால் எல்லா விதத்திலும் இராமனை ஒத்தவனாகிய பரதனால் தனக்கு நீர்க்கடன்கூடச் செய்யப்பட முடியாத ஒரு நிலையைத் தசரதனே ஏற்படுத்திக்கொண்டுவிட்டான், வசிட்டனை நோக்கி, "சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் o துறந்தேன்; மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகன் என்று உன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு" (1854) என்று தசரதன் கூறிவிட்ட காரணத்தால் இறுதியாக நீர்க்கடன் செய்வதற்குக்கூடப், பரதனுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தசரதனுக்கு நீர்க்கடன் செய்யப் பரதனுக்கு வாய்ப்பில்லை என்று கூறுவதைக் காட்டிலும், பரதன் கையினால் நீர்க்கடன் பெறுகின்ற வாய்ப்பைத் தசரதன் இழந்துவிட்டான் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமாகும். இவ்வாறு தசரதனுடைய வாழ்க்கை அயோத்தியா, காண்டத்தில் முடிந்துவிடுகின்றது. ஒப்பற்ற, . . . . . "தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும் பள்ளம் எனும் தகையான்" - - (657) ஆன பரதனைத் தசரதன் நன்கு அறியாத காரணத்தால் "நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்" (2332) என்றபடி இராமனுக்கு எந்த விதத்திலும் குறைந்தவன் என்று கூற முடியாத அளவிற்கு இராமனோடு சமநிலையுடையவ னாகிய பரதன் கையினால் நீர்க்கடன்கூடப் பெறமுடியாத நிலையைத் தசரதன் அடைந்தான் என்றால், இந்தப் பாத்திரப் படைப்பின் அமைப்பில் கம்பன் சில உத்திகளைக் கையாளு கின்றான். எல்லை மீறிய பாசம் என்பது யாரிடத்தில் வைக்கப்பட்டாலும் அது இறுதியில் பெருந்துன்பத்தைத் தரும் என்பதற்குத் தசரதனையே எடுத்துக்காட்டாக அமைத்து விடுகின்றான், o . . . . . . . . . . . . மூலநூலிலுள்ள கன்யா சுல்கக் கதையை மறைத்து விட்டானாயினும் முழுவதுமாக மறைக்க முடியவில்லை,