பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கம்பன் எடுத்த முத்துக்கள் கம்பனால், ஆகவே, வேறு வழியே இல்லா நிலையில் தசரதன் வரம் கொடுக்க ஒத்துக்கொண்டான் என்று கதையைக் கொண்டுசென்றான் கம்பன். இனி வசிட்டன் முக்காலத்தையும் உணர்ந்தவனாயிற்றே, அப்படியிருக்க, கைகேயி செய்த இந்தக் காரியத்திற்காக ஏன் அவளை ஏசினான் என்று ஒரு சிலருடைய மனத்தில் ஐயம் எழலாம். வசிட்டனைப் பொறுத்தமட்டில் இதுதான் நடை பெற வேண்டியது என்பதை நன்கு அறிந்தவன். ஆதலால், கைகேயியை அவன் குறை கூறுவதற்கு இடமே இல்லை. என்றாலும், தன்னுடைய முக்கிய சீடனாகிய தசரதன் படும் பாட்டைப் பார்த்து, எவ்வாறாயினும் அவனுடைய துயரத்தைப் போக்கவேண்டு மென்ற ஒரே நோக்கத்தில் வசிட்டன் கைகேயியிடம் கேட்கின்றான். நீ இந்த வரத்தைத் திருப்பித் தந்துவிடு' என்று. உறுதியாகக் கைகேயி மறுத்துவிட்டாள். ஆகவே, அவளை ஒரு வகையாகப் பார்த்துவிட்டு வசிட்டனும் நீங்கிவிடுகின்றான் என்று கதையை அமைத்துச் செல்கிறான் கவிச்சக்கரவர்த்தி, இந்தக் காண்டத்தின் முற்பகுதியில் மந்தரை வருகின்றாள். மாபெரும் சூழ்ச்சி செய்கின்றாள். அதோடு மறைந்துவிடுகின்றாள். கதைத் தலைவ னாகிய இராமனைப் பெற்ற தசரதன் நான்கு பிள்ளைகளைப் பெற்றும், அவனால் விரும்பப்பட்ட இராமனாலோ அல்லது இராமனையே ஒத்த பரதனாலோ நீர்க்கடன் செய்யப்பெற முடியாத நிலையில் பரிதாபமாக உயிரை விட்டுவிடுகின்றான். ஆகவே, இந்த இரண்டு பாத்திரங்களும் போக எஞ்சி இருப்பவை கைகேயி, கங்கைத் தலைவனாகிய குகன், பரதன் ஆகிய மூவருமேயாவர். கைகேயி என்ற பாத்திரத்தை ஒரு புதிய கண்ணோட்டத் துடன் பார்ப்பது பொருத்தமாகும். என்று நினைக்கின்றேன். இதுவரையில் கைகேயியைப் பெருங் கொடுமைக்காரியாக, கருணையற்றவளாக, பண்பற்றவளாகவே கண்டோம். தான் கொண்ட கருத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகக் கணவனை இழப்பதைக்கூடப் பெரிதாகக் கருதவில்லை என்றுதான் கூறிக் கொண்டிருந்தோம். ஆனால்,