பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கம்பன் எடுத்த முத்துக்கள் "என் தெய்வம்" என்று. கைகேயி என்ற பாத்திரப் படைப்பை எந்த அளவுக்குக் கவிஞன் புதிய முறையிலே படைத்திருக்கின்றான் என்பதை இந்தக் கண்ணோட்டத்துடன் பார்ப்போமேயானால் கொஞ்சம் வியப்பைத் தருவதாகவே அமைகின்றது. மூல நூலில் அமைந்துள்ள முறையை விட்டுவிட்டுப் புதிய முறையில் கன்யா சுல்க்கத்தை ஒரளவு மறைத்து, அதே நேரத்தில் கைகேயியை ஒரு மாபெரும் தியாகியாக - ஸ்தித ப்ரக்ஞையாக கடமையை நிறைவேற்றுவதற்காகப் பழி பாவங்களை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு பாத்திரமாக அமைத்துவிடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். 'இந்த அடிப்படையில்தான் அந்தப் பாத்திரத்தை அமைக்கின்றேன்' என்பதைச் சுட்டிக் காட்டுபவன் போல, அப் பாத்திரத்தை அறிமுகம் செய்கின்றபோதே மிக அற்புதமான முறையில் அறிமுகம் செய்துவைக்கின்றான். மந்தரை வந்தபொழுது கைகேயி உறங்கிக்கொண்டிருக்கிறாள். கடைக்கண் அளி பொழிய, பொங்கு அணை மேல் கிடந்தாள்" (1448) என்று கைகேயியை முதன் முதலாக அறிமுகம் செய்வான் கம்பநாடன். உறங்கும்பொழுது ஒருவருடைய அக மனத்தில் என்ன எண்ணம் நிறைந்திருக்கிறதோ அதுதான் அவரது முகத்தில் வெளிப்படும். கைகேயி உறங்கிக்கொண்டிருந்தபோது அவள் கடைக்கண் வழி அருள் சுரந்துகொண் டிருந்தது என்றால், அவளுடைய அகமனம், ஆழ்மனம், சிந்தை ஆகிய அனைத்திலும் அருள் நிரம்பி இருக்கின்றது என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றான் க்விச்சக்கரவர்த்தி. இப்படி மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கிலும் அருள் நிறைந்திருப்பவளாகிய ஒருத்தி, எவ்வாறு கொடுமையான காரியத்தைச் செய்ய முடியும் என்று சிந்திப்போமேயானால் உண்மையை விளங்கிக்கொள்ள