பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கம்பன் எடுத்த முத்துக்கள் 'வரம் கொண்டு அவனைக் காட்டுக்குப் போக்கினேன்' என்று கைகேயி பேசுவதைக் கேட்டபோது அவனுடைய சினம் எல்லையில்லாமல் வளர்கிறது. ஆகவே, இயல்பாக எல்லையற்ற பண்புடையவனாய் அடக்கத்தின் உறைவிடமாக இருக்கின்ற பரதன் இப்போது இவ்வளவு சினம் கொள்ளும் போது நம்மையும் அறியாமல் ஒரு குறள் நினைவுக்கு வருகின்றது. - - . . . "குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்த லரிது" - (குறள் 29) தன் எதிரே நின்று, மனத்தில் சிறிதும் கலக்கம் இல்லாமல், நான்தான் இராமனைக் காட்டுக்குப் போக்கினேன். தந்தை 'வானத்தான் ஆனான்' என்று சொல்லுகின்ற ஒருத்தியைக் கொன்றுவிட வேண்டுமென்று பரதன் நினைப்பதில் தவறு இல்லை. ஆனால், அந்த நிலையில்கூடத் "தாய் என்னும் பெயருக்காக உன்னைக் கொல்லாமல் விடவில்லை. என்னுடைய முன்னவனாகிய இராகவன் முனியும் என்று அஞ்சின காரணத்தால்தான் உன்னைக் கொல்லாமல் விடுகின்றேன்" என்று கூறுகிறான். தன் சினம் எல்லை மீறிப் போகாதபடி, எல்லை கடந்து போய் ஊறு விளைக்காதபடி அவன் இராமனிடத்தே கொண்டிருந்த அன்பும், பக்தியும், பண்பாடாகிக் குறுக்கே நின்று காக்கின்றன. பரதனை முதன்முதலாக நாம் பார்க்கின்றபோது அளவு கடந்த சினத்தின் எல்லையில் நிற்கின்ற பாத்திரமாகத்தான் கம்பன் படைத்துக் காட்டுகிறான். - - . . . . . தன் தாயாகிய கைகேயியைக் காணும்போது சினத்தின் எல்லையில் நிற்கின்ற பரதன், அடுத்துப் பெரிய தாயாராகிய கோசலையைப் பார்க்கும்போது கோபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்துவிட, சோகத்தின் எல்லைக்கே சென்று விடுகின்றான். "கைகயர் கோமகள் இழைத்த கைதவம், ஐய! நீ அறிந்திலை போலுமால்? (2197) என்று கோசலை பேசியது அவனுடைய மனத்தைப் புண்ணாக்கிவிட்டது. - - - .