பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 93 பாட்டனுடைய ஊருக்குச் சென்று பலநாள் தங்கியிருந்த தன்னைப் பார்த்து, கைகேயி செய்த காரியத்தில் உனக்குப் பங்கு இல்லையோ என்று கோசலை கேட்டது அவனிடம் மாபெரும் துயரத்தைத் தோற்றுவித்துவிட்டது. பல பாடல்கள் வஞ்சினம் கூறுவது போல, அதனை நான் அறிந்திருப்பேனேயானால் இன்ன இன்ன பாவத்தைச் செய்தவர்கள் போகின்ற நரகத்திற்குப் போவேனாகவும்' எனப் பரதன் பேசும்போது கோசலை பதறிவிடுகின்றாள். 'இவ்வளவு தூய மனம் படைத்தவனையா நாம் சந்தேகப்பட்டு விட்டோம் என்று நினைக்கின்றாள். பரதனைப் பொறுத்தமட்டில் ஒரு புதுமை என்ன வென்றால், பெற்ற தந்தையாகிய தசரதன் பரதனை அறியவில்லை; வளர்த்த தாயாகிய கோசலைகூட முதலில் அவனை நன்கு அறிந்துகொள்ளவில்லை; உடன்பிறந்தவ னாகிய இலக்குவனும் அவனை அறிந்துகொள்ளவில்லை. இலக்குவனைப் பொறுத்தமட்டிலும் எல்லையற்ற கோபம் உடையவனாய், பரதனை வெறுக்கின்றவனாய், குகனுடைய மனத்தில்கூட தன்னுடைய முரண்பட்ட கருத்தைப் புகுத்து பவனாகத்தான் இருக்கின்றான். இந்த நிலையில் கூட்டுக்குள் வாழும் பறவை போன்று பரதன் வாழ்கிறான். ஆக, புதிரான அந்தப் பாத்திரத்தை உள்ளபடி எடைபோட்டவர்கள் விசுவாமித்திரனும் இராகவனும் ஆவர். அரசவையைக் கூட்டிய முறையில் வசிட்டன், நீ பட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று சொல்லும் போது பரதன் துடித்துவிடுகின்றான். - - மாபெரும் தவறு இழைத்துவிட்டார் தந்தை அதைப் போக்கி மன்னரைக் கொணர்வதற்காக நான் கானம் போகின்றேன்' என்று பரதன் சொல்லும்போது பரதனிடத்தில் இதுவரையிலும் யாரும் எதிர்பார்க்காத புதுமை தோன்று வதைக் கண்டு அனைவரும் வியப்படைகின்றனர். . . பரதன் பட்ட்த்தை ஏற்றுக்கொள்வானா, மாட்டானா என்ற ஐயத்தில்தான் மக்கள் இருந்தார்களே தவிர, இப்படி