பக்கம்:கம்பன் கலை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 171 இலக்குவனுடைய மனோநிலை கோபம் காரணமாக எவ்வளவு தாழ்ந்த நிலைக்குச் சென்றுவிட்டது என்பதை நமக்கு நன்கு விளக்குகின்றன. இத்தகைய சீற்றத்துடன், இத்தகைய ஒரு பண்பிழந்த மனோநிலையில் இலக்குவன் ஓர் உவமை கூற நேர்ந்தால் அவன் கல்வி, அறிவு, பண்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ற உவமை கூறுவான் என்று எதிர் பார்ப்பதும் தவறு. அப்படியே அவன் கூற்றாக உயர்ந்த ஒர் உவமையைக் கவிஞன் கூறியிருப்பின் கம்பன் கவிஞனாக ஆகலாமே தவிர கவிச்சக்கரவர்த்தியாய் ஆகமுடியாது. கவிச்சக்கரவர்த்தி கம்பனா இத்தவற்றைச் செய்வான்? எனவே, மிகமிக விழிப்புடன் இலக்குவன் கூற்றாகக் கீழ்க்கண்ட உவமையைக் கவிஞன் தருகின்றான்: - இராமனுக்குக் கிடைக்கவேண்டிய முடியைப் பரதனுக்குக் கைகேயியே பெற்றுவைத்தது எதைப் போல இருக்கிறதென்றால், சிங்கக் குட்டிக்கு எனத் தயாரித்து வைத்த இன்சுவையோடு கூடிய புலாலை அற்பத்தனம் பொருந்திய சொறிநாய் ஒன்றுக்கு இடுவது போலாகும் என்ற கருத்தில் இலக்குவன் பேசுகின்றான். 3. “சிங்கக் குருளைக்கு இடுதீம் சுவை ஊனை, நாயின் வெம்கண் சிறுகுட் டனுக்கு ஊட்ட விரும்பி னளால்!" என்ற இலக்குவன் கூற்று ஆய்தற்குரியது. "அறத்தின் ஆணி’ என்று விஸ்வாமித்திரனாலும், "ஆயிரம் இராமர்கட்கும் மேம்பட்டவன்" என்று இராமன் தாயாகிய கோசலையாலும் புகழப்பெற்ற பரதனை"தள்ளரிய பெருநீதித் தனி ஆறு புக மண்டும் வெள்ளம்" என்றும் புகழப்பெற்ற பரதனை-"வெங்கண் நாயின் சிறு குட்டன்" என்று இலக்குவன் பேசுகிறான் என்றால் அது மன்னிக்க முடியாத பெரும் பிழையாகும். ஆனால், வேண்டுமென்றேதான் கவிச்சக்கரவர்த்தி இந்த உவமையை இலக்குவன் கூற்றாகக் கையாளுகின்றான். இது தவிர வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/182&oldid=770698" இலிருந்து மீள்விக்கப்பட்டது