பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103



ய்தனர்; எறிந்தனர்; எரியும் நீருமாப்
பெய்தனர்; பெருவரை பிடுங்கி வீசினர்;
வைதனர். தெழித்தனர்; மழுக்கள் ஓச்சினர்;
செய்தனர் ஒன்றல தீய மாயமே.

யாகத்தைப் பாழ்படுத்த எண்ணிய அரக்கர்கள் அம்புகளை எய்தார்கள்; ஈட்டிகளை எறிந்தார்கள்; நெருப்பைக் கொட்டினார்கள்; நீரைப் பெய்தார்கள்; மலைகளைப் பிடுங்கி வீசினார்கள்; வைதார்கள்; அச்சுறுத்தினார்கள் இன்னும் பல தீய செயல்களைச் செய்தார்கள்.

𝑥𝑥𝑥𝑥

எய்தனர் – அம்புகளை எய்தனர்; எறிந்தனர்—ஈட்டிகளை எறிந்தார்கள். எரியும் நீரும் ஆகப் பெய்தனர் — நெருப்பும் நீரும் சொரிந்தனர். பெருவரை பிடுங்கி வீசினர் — பெரிய மலைகளை வேருடன் பிடுங்கி வீசினர்; வைதனர் — பலவித வசைச் சொற்களால் ஏசினர்; தெழித்தனர் — அதட்டினர். மழுக்கள் ஓச்சினர் — மழு ஆயுதங்களை எறிந்தனர்; ஒன்று அல தீய மாயம் செய்தனர்—இவ்வாறு அவர்கள் செய்த தீய செயல் ஒன்றன்று; பல மாயம் ஒன்றன்று; பற்பல.

𝑥𝑥𝑥𝑥

தூம வேல் அரக்கர் தம் நிணமும் சோரியும்
ஓம வெங்கனலிடை உகும் என்று உன்னி அத்
தாமரைக் கண்ணனும் சரங்களே கொடு
கோமுனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான்.