பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131


“மாபெரும் ஞானியாகிய விசுவாமித்திரனுக்குச் சிறிதும் வெட்கமில்லை” என்பார் சிலர்.

“நமது அரசன் ஜனகனைப் போல கொடிய மனம் கொண்டவர் வேறு எவருமிலர்” என்பார் மற்றும் சிலர்.

“இந்த நம்பி இந்த வில்லை வளைக்காவிட்டால் நம் சீதைக்கு அதிர்ஷ்டம் இல்லை” என்பார் வேறு சிலர்.

xxxx

ஞானம் முனிக்கு – ஞானமுடைய இந்த விசுவாமித்திர முனிவனுக்கு, ஒரு நாண் இலை–நாணம் சிறிதும் இல்லை; என்பார்– என்று பேசுவார் சிலர். கோன் இவனில் – அரசர்களிலே நம் ஜனகனைப் போன்ற; கொடியோர் இலை—கொடிய மனமுடையவன் எவனுமில்லை; என்பார்—என்று பேசுவார். மானவன்– பெருமை மிக்க இந்த நம்பி; இச்சிலை கால்வளையானேல்– இந்த வில்லைக் காலூன்றி வளைக்காவிடில்; பீனம் தனத்தவள்–பருத்த முலையுடைய நம் சீதை; பேறு இவள்–அதிர்ஷ்டம் இல்லாதவள். இவனைத் திருமணம் செய்து கொள்ளக் கொடுத்து வைக்காதவள்; என்பார்—என்று பேசிக்கொள்வார்.

xxxx


தோகையர் இன்னன
        சொல்லிட நல்லோர்
ஒகை விளம் பட
        உம்பர் உவப்ப
மாகம் அடங்கலும்
        மால் விடையும் பொன்
 நாகமும் நாகமும்
        நாண நடந்தான்