பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176



அயோத்தியிலே ஒரே கோலாகலம். அந்நகரே இந்திரலோகமாக காட்சியளித்தது.

பரதனைக் காண விழைந்த அவன் பாட்டன் கேயராசனது கட்டளையை ஏற்று வந்திருந்தான் யுதாசித்து. இராமனை வணங்கி விட்டு, அண்ணலைப் பிரிய மனமின்றி, பிரியா விடைபெற்று பாட்டனாரைக் காணச் சென்றான் பரதன். சத்துருக்கனனும், அவன்பால், கொன்ட பக்தியால், பரதனுடன் சென்றான்.

அவர்கள் சென்ற பின், தசரதன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய நினைத்தான். நாளும் குறித்தான் ஆனால் இங்கே குறுக்கிட்டது ஊழ் என்று சூசகமாகக் காட்டி பால காண்டத்தை முடிக்கிறான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.

𝑥𝑥

பால காண்டம் முற்றிற்று