பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89



ன்ன தம்பியும்
     தானும் ஐயனாம்
மன்னன் இன் உயிர்
     வழி கொண்டால் எனச்
சொன்ன மாதவன்
     தொடர்ந்து சாயை போல்
பொன்னின் மா நகர்ப்
     புரிசை நீங்கினார்.

இராமனைப் போலவே அவனுடைய தம்பி லட்சுமணனும் தனது இடது பக்கத்திலே வாளைக் கட்டிக் கொண்டான். தோள்களிலே அம்புப் புட்டிலைக் கட்டிக் கொண்டான். கையிலே வில் ஏந்தினான். தசரத மன்னனின் உயிர் நடந்து செல்வது போல முனிவனைப் பின் தொடர்ந்து மூவருமாக அயோத்தி மா நகரின் மதில் வாயிலைக் கடந்து சென்றனர்.

𝑥𝑥𝑥𝑥

அன்ன தம்பியும் தானும்—(தன்னைப் போலவே வாளும் அம்புப் புட்டிலும் வில்லும் தாங்கிய கோலம் கொண்ட) அத்தகைய தம்பி லட்சுமணனும் தானும்; ஐயன் ஆம் மன்னனின்– தந்தையாகிய தசரத மன்னனது; உயிர் வழி கொண்டால் என்ன–இனிய உயிர் வழி நடந்து செல்வது போல; சொன்ன மாதவன்—தன்னைத் தொடர்ந்து வருமாறு கூறிய பெருந்தவசியாகிய விசுவாமித்திர முனிவரை; சாயை போல் தொடர்ந்து—அவரது நிழல் போலப் தொடர்ந்து சென்று; மாநகர்—(மூவருமாக) சிறப்பு மிக்க அயோத்தி நகரின்; பொன்னின் புரிசை நீங்கினார்—பொன்மயமான மதில் வாயில் கடந்தனர்.

𝑥𝑥𝑥𝑥

12