பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4



"பழம் எப்படியிருக்கும்?" என்று கேட்டான் ஆஞ்சநேயன்.

"செக்கச் செவேல் என்று இருக்கும்" என்று கூறினாள் தாய்.

அப்போது சூரியன் தகதகவென்று சிவந்த மேனியனாய் புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.

"பழம் இது!" என்று கருதிப் பாய்ந்தான் குழந்தையாகிய ஆஞ்சநேயன்.

கண்டான் இந்திரன்; கொண்டான் கோபம். தனது வச்சிராயுதத்தால் குழந்தையைத் தாக்கினான். குழந்தையின் கன்னம் சிதைந்தது. அந்தக் குழந்தைக்கு அநுமன் என்று பெயரிட்டான் இந்திரன். அனு என்றால் கன்னம் என்று பொருள். கன்னத்திலே சிறப்புடையவன் அநுமன்.

***

மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய - மேகம் போல நீல நிறங்கொண்டு அமைந்த அழகிய திருமேனி உடையவனே! மகளிர்க்கு எல்லாம் - உன்னைக் காணும் பெண்களுக்கு எல்லாம்; நஞ்சு என - விஷம் என்று சொல்லும்படி; தகைய ஆகி - தன்மை உடையவனாகி; நளிர் இரும் பனிக்கு. குளிர்ச்சி பொருந்திய பெரும் பனிக்கு; தேம்பா - வாடாத; கஞ்சம் ஒத்து - தாமரை மலர் போன்று; அலர்ந்த-மலர்ந்த; செய்ய கண்ண - சிவந்த கண்களை உடையவனே; யான் - நான்; காற்றின் வேந்தற்கு - காற்றரசன் வாயுதேவனுக்கு; அஞ்சனை வயிற்றில் வந்தேன் - அஞ்சனை வயிற்றில் பிறந்தேன்; நாமமும் அநுமன் என்பேன் பெயரும் அநுமன் என்பேன்.

***



"இம் மலை இருந்து வாழும்
      எரி கதிர் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்
      தேவ நும் வரவு நோக்கி