பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11



நோக்கினான் - பார்த்தான்; நெடிது நின்றான் - நீண்ட நேரம் வியப்புற்று நின்றான்; நொடிவு அருங்கமலத்து அண்ணல் சொல்லற்கு அரிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன்; ஆக்கிய உலகம் எல்லாம் - படைத்த உலகங்களில் உள்ள உயிர்கள் எல்லாம்; அன்று தொட்டு இன்று காறும் - அன்று முதல் இன்று வரை; புரிந்த பாக்கியம் எல்லாம் - செய்த புண்ணியம் யாவும்; குவிந்து . திரண்டு; இரு படிவமாகி - இரண்டு உருப்பெற்று; மேக்கு உயர் தடந்தோள் பெற்று - மிக்குயர்ந்த தோள் பெற்று; வீரராய் விளைந்த என்பான் - வீரராக உரு எடுத்தனரோ !

இவ்வாறு வியந்து நின்ற சுக்கிரீவனை அழைத்து அருகில் அமருமாறு பணித்தான் இராமன். சுக்கிரீவனும் அமர்ந்தான்.

“மதங்கர் ஆசிரமத்திலே இருந்த சபரி எனும் வேடுவத் தவசி உன்னைப் பற்றிக் கூறினாள். உன்னால் எனக்கு ஆக வேண்டிய காரியம் ஒன்று உளது. அதன் பொருட்டு உன்னைத் தேடி வந்தேன்” என்றான் இராமன்.

அதே சமயத்தில் சுக்கிரீவனும் வாலியினால் தனக்கு நேர்ந்த துன்பத்தைக் கூறுகிறான்.

***

“முரண் உடைத் தடக்கை ஓச்சி
        முன்னவன் பின் வந்தேனை
இருள் நிலைப் புறத்தின் காறும்
        உலகு எங்கும் தொடர இக்குன்று
அரண் உடைத்தாக உய்ந்தேன்
        ஆர் உயிர் துறக்கலாற்றேன்
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத்
        தாங்குதல் தருமம்” என்றான்.