பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


நீராடும் சுனைகளிலே வான் ஆறு வந்து பாயும். கதிர் அறுக்கப்பட்ட தினைப் புலங்களிலே ஆண் மீன்கள் துள்ளிப் பாயும். அருவிகள் ஆறு போல் பாயும். அவை ஒன்றில் ஒன்றில் யானைகள் வந்து பாய்ந்து விளையாடும். தினைப் புலங்களில் குருவி பாயும். மரக்கொம்புகளிலே மந்தி தாவும்

***

மாடெலாம் - அம்மலைப் பக்கங்களில் எல்லாம்; மருவி ஆடும் வாவி தோறும் - நீராடும் சுனைகளாகிய தடாகங்கள் தோறும்; வான ஆறு வந்து பாயும் - வான் முட்டும் மலைச் சிகரங்களினின்று ஓடி வரும் ஆறு பாயும்; இருவி ஆர் தடங்கள் தோறும் - கதிர் அறுக்கப்பட்ட தாள்களோடு விளங்கும் தினைப் புலங்களில்; ஏறு பாயும் - ஆண் மீன்கள் துள்ளிப் பாயும்; அருவி- அருவிகள் ஆறு போல் பாயும்: ஒன்றில் ஒன்றில் - அவை ஒன்வொன்றிலும்: யானை பாயும் யானைகள் பாய்ந்து விளையாடும்; ஏனலில் - திணைப்புலங்களில்; குருவி பாயும் - குருவிகள் விளையாடும்; மத்தி - ஆண் குரங்குகள்; ஓடி - ஓடிச் சென்று: கோடு பாயும் - கொம்புகளில் தாவும்.

***


தேன் இழுக்கு சாரல் வாரி செல்ல
        மீது செல்லும் நாள்
மீன் இழுக்கும்; அன்றி வானவில்
        இழுக்கும்; வெண்மதிக்
கூன் இழுக்கும்; மற்று உலாவு
        கோள் இழுக்கும் என்பவால்
வான் இழுக்கும் ஏல வாச
        மன்றல் நாறு குன்றமே

அக் குன்றிலே ஏலக்காய் மணம் கமழும். அந்த நறுமணம் வானில் வாழ்தேவர்களையும் தன் பால் இழுக்கும். தேன் அருவி சாரல் வழி ஓடும். வான வீதியிலே ஓடும்.

கி.—2