பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280


‘சீதை நிமித்தமாக வானரப்படையுடன் மானுடர் நெருங்கிவிட்டார்கள் என்றால், முன்னம் நந்தி, வேதவதி முதலியோர்களாற் கொடுக்கப்பட்ட சாபத்தைக் கருதி, சீதையை விட்டிடவேண்டியதுதானே! அங்ஙனமிருக்க, அவ்வாறு நீ செய்யாதது, கொடுவிதி உன்னை தூண்டுவதால் அன்றோ?

மறத்தின் வழி நடக்கின்ற உனக்கு வெற்றி கிடைக்குமோ? உனது செயல் வெற்றித் தன்மை அழிவதற்கே ஏதுவாகும் புலஸ்திய முனிவரின் வழியில் வந்த, வஞ்சகமில்லாத குலத்தின் மேன்மை உனது முறையற்ற செய்கையால் அழிந்தது!’ என இடித்துக் கூறினான்.

***

(அதர்ம வழி நடக்கும் உனக்கு) குற்றம் முற்றுமோ - வெற்றி கிட்டுமோ; வலத்தியல் அழிவதற்கு ஏது- வலிமை அழிவதற்கே ஏதுவாக; புலத்தியன் வழி முதல் வந்த - புலஸ்திய முனிவர் வம்சத்தில் வந்த; பொய்யறு - பொய்யில்லாத; குலத்து இயல்பு - நம் குல இயல்பு; அழிந்தது - அழிந்து போயிற்று; மையது நிலத்தின் இயல் - குற்றமற்ற நிலத்தின் தன்மை; நீரின் இயல் - நீரின் தன்மை; என்னும் நீரதால் - என்னும் நியதிப்படி ஆயிற்று.

***

அத்துடனா?


கொடுத்தனை இந்திரற் கரசும்
        கொற்றமும்
கெடுத்தனை நின்பெருங் கிளையும்
        நின்னையும்
படுத்தனை பலவகை அமரர்
        தங்களை
விடித்தனை வேறினி வீடும்
        இல்லையால்.