296
லட்சுமணனும் இந்திரசித்தும் ஒருவர் மீது ஒருவர் வீசியபாணங்களால் கடல்கள் வற்றின; மலைகள் பிளந்தன. சூரியனே பற்றி எரிந்தான்; இரத்த நாற்றம் எங்கும் பரவியது; வற்றிய கடல்களால் ஏற்பட்ட பள்ளங்களை அம்புச்சரங்கள் மேடாக்கின. பூமியே அலையலாயிற்று.
***
கடல்வற்றின - (அவ்விருவரும் எய்த அம்புகளால்) கடல்கள் எல்லாம் நீர்வற்றின; மலை உக்கன - மலைகள் பிளவு பட்டன; பருதி கனல் கதுவுற்று உடல் பற்றின - சூரியனுடைய உடல் முழுதும் கனலால் கதுவப்பட்டு பற்றி எரிந்தன; மரம் உற்றன கனல் பட்டன - தீயினால் தகிக்கப்பட்ட மரங்கள் அழிந்தன; உதிரம் சுடர்பற்றின சுறு - இரத்த நாற்றம்; மிக்கது - மிகுந்தது; துணிபட்டு உதிர் - துண்டிக்கப்பட்டு உதிர்கின்ற; கணையின் - அம்புகளாலே; பரவைக் குழிகடலாகிய குழிந்த இடம்; திடர் பட்டது - மேடாகிவிட்டது. புவனம் - பூமி; திரியுற்றது - சுழலத் தொடங்கியது.
***
புரிந்தோடின; புகைந்தோடின
பொரிந்தோடின புகை போய்
எரிந்தோடின கரிந்தோடின
விடமோடின வலமே
திரிந்தோடின செறிந்தோடின
விரிந்தோடின திசை மேல்
சரிந்தோடின கருங்கோளரிக்கு
இளையான் விடுசரமே.
நிரும்பிலையில் இந்திரசித்துக்கும் லட்சுமணனுக்கும் கடும்போர் நிகழும்போது, லட்சுமணன் விடும் அம்பு சரங்களுள் சில வளைந்தோடின; இன்னும் சில புகை கக்கிக் கொண்டே ஓடின; வேறு சிலவோ தீப்பொறி சிதற ஓடின.