பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

‘அனுமனிற்க நாம் ஆருயிற்
        கிரங்குவது அறிவோ?’

என்று கேட்கிறான்.

அநுமன் என்ன செய்கிறான்?
பறந்துச் செல்கிறான்.

மருந்து கொணர்கிறான்; லட்சுமணனை உயிர்ப்பிக் கிறான். லட்சுமணனையும் அனுமனையும் பாராட்டு கிறான் இராமன்.

போர்க்களத்தை விபீடணனும் அவனைச் சார்ந்தோரும் பார்வையிடுகின்றனர். அரக்கர் சேனை அழிந்து கிடந்ததைப் பார்க்கின்றனர்.

இராவணனோ லட்சுமணன் மாண்டு போனான் என்ற பொய்யான நம்பிக்கையில் இன்பந் திளைக்கிறான். உண்மை அறிந்தவுடன் கோபுரமேறி பார்க்கின்றான், போர்க்கள் அவலக் காட்சிகளை. பின்னர் ஆலோசனை மண்டபத்தை அடைந்தான்.

சினத்துடன் தேரெறி போர்க்கோலத்துடன் செல்கிறான் எஞ்சிய சேனையோடு. அதே சமயம் இராமனும் தேவர்கள் அனுப்பிய தேரிற் ஏறுகிறான்.

இராவணன் ஏறிய தேர் எத்தகைத்து? கருதிய விடமெல்லாம் நொடியிற் செல்லக் கூடியது. சூரியன் தேர்க்குதிரைகளின் மரபின் வந்த குதிரைகள் உடையது.

போர்க்கோலம் பூண்டான் இராவணன். இக்கோலத்திற்கு என அவன் அணிந்த கவசங்கள் இரண்டு.

***