33
வாய்மையும் மரபும் காத்து
மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ
பரதன் முன் தோன்றினாயே!
தீமை தான் பிறரைக் காத்துத்
தான் செய்தால் தீங்கு அன்றாமோ?
தாய்மையும் அன்றி நட்பும்
தருமமும் தழுவி நின்றாய்.
“வாய்மையும், மரபும் காத்து வான் புக்க தசரதன் மைந்தனே! நீ பரதன் முன் தோன்றினாயே! மற்றவருக்கு ஏற்படும் தீமையினின்று அவரைப் பாதுகாப்பதற்காக நீ தீமை செய்தால் அது நன்மை ஆகுமா?”
***
வாய்மையும் – சத்தியமும்; மரபும் – பிறந்த குலப் பெருமையும்; காத்து – பாதுகாத்து; மன் உயிர் துறந்த – (அதன் பொருட்டு) தனது உயிர் நீத்த; வள்ளல் – வள்ளலும்; தூயவன் – தூய்மையானவனும் ஆகிய தசரத சக்கரவர்த்தியின்; மைந்தனே – பிள்ளாய்; நீ பரதன் முன் தோன்றினாயே – நீ பரதனுக்கு முன் பிறந்தாயே; பிறரை தீமை காத்து – மற்றவருக்கு ஏற்படும் தீமையினின்றும் அவரைப் பாதுகாத்து; தான் செய்தால் – தானே அத்தீமை செய்தால், தீங்கு அன்று ஆமோ – அது நல்லது ஆகுமோ? தாய்மையும் – தாய்மைக் குணமும்; அன்றி – அல்லாமல்; தருமமும் – அறமும்; நட்பும் – சிநேகமும்; தழுவி நின்றாய் – சார்ந்து நிற்பவனே.
***
கி.—3