பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53



பெரிய நீண்ட தோளுடைய சாம்பவன் சேனையை வர்ணிக்கிறார் கம்பர். சாம்பவன்[1] கரடிகளுக்கு அரசன். அவன் திரட்டி வந்த படை ஆயிரத்து அறுநூறு கோடிக்கு எட்டியது. அவை சென்ற இடமெல்லாம் அப்படியே நிறைத்துக் கொண்டனவாம்.

***

தட நெடு வரையை ஏய் உரு புயம் சாம்பன் என்பவனும் - பெரிய நீண்ட மலையை ஒத்த உருவத்தோடு கூடிய தோள்களையுடைய சாம்பவனும்; பரவையின் திரையில் தாம் உருத்து உடனே வர - சமுத்திரத்தின் அலைகளைப் போல தாவி குதித்து தன்னுடனே தொடர்ந்து வர; ஆயிரத்து அறுநூறு என்னுங் கோடியின் – ஆயிரத்து அறுநூறு என்னும் கோடி கணக்கையுடைய; கடை அமைந்த பாயிரப் பெரும்படை - (சென்ற) இடங்களில் நிரம்பிய சிறப்பையுடைய பெரிய சேனையை; கொண்டு - உடன் கொண்டு; வந்து இறுத்தான் - வந்து தங்கினான்.

***

அவனும் அண்ணல் அனுமனை,
        ஐய நீ
புவன மூன்று நின்
        தாதையிற் புக்குழல்
தவவேகத்தை ஓர் கிலை
        தாழ்த்தனை
கவன மாக்குரங்கில் செயல்
        காண்டியோ


  1. * பிரம்மன் முன்னொரு காலத்தில் கொட்டாவி விட்ட போது அவர் வாயினின்று கரடியாக தோன்றியவன். சாம்பவன் என்பது வரலாறு.