53
பெரிய நீண்ட தோளுடைய சாம்பவன் சேனையை வர்ணிக்கிறார் கம்பர். சாம்பவன்[1] கரடிகளுக்கு அரசன். அவன் திரட்டி வந்த படை ஆயிரத்து அறுநூறு கோடிக்கு எட்டியது. அவை சென்ற இடமெல்லாம் அப்படியே நிறைத்துக் கொண்டனவாம்.
***
தட நெடு வரையை ஏய் உரு புயம் சாம்பன் என்பவனும் - பெரிய நீண்ட மலையை ஒத்த உருவத்தோடு கூடிய தோள்களையுடைய சாம்பவனும்; பரவையின் திரையில் தாம் உருத்து உடனே வர - சமுத்திரத்தின் அலைகளைப் போல தாவி குதித்து தன்னுடனே தொடர்ந்து வர; ஆயிரத்து அறுநூறு என்னுங் கோடியின் – ஆயிரத்து அறுநூறு என்னும் கோடி கணக்கையுடைய; கடை அமைந்த பாயிரப் பெரும்படை - (சென்ற) இடங்களில் நிரம்பிய சிறப்பையுடைய பெரிய சேனையை; கொண்டு - உடன் கொண்டு; வந்து இறுத்தான் - வந்து தங்கினான்.
***
அவனும் அண்ணல் அனுமனை,
ஐய நீ
புவன மூன்று நின்
தாதையிற் புக்குழல்
தவவேகத்தை ஓர் கிலை
தாழ்த்தனை
கவன மாக்குரங்கில் செயல்
காண்டியோ
- ↑ * பிரம்மன் முன்னொரு காலத்தில் கொட்டாவி விட்ட போது அவர் வாயினின்று கரடியாக தோன்றியவன். சாம்பவன் என்பது வரலாறு.