125
வரலாறு' (History of Tamil Language and Literature) என்னும் பெயரால், தமிழ்க் கல்வியாளரும் தமிழ் ஆய்வாளரும் வழங்குவது மரபு. பாரதியாரின் பாடல்களில் தமிழ் மொழி வரலாறு பற்றிய சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவை:
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”.
“தேமதுரத் தமிழ் ஓசை"
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"-(பாப்பா பாட்டு-12)
தமிழ் மொழி வாழ்த்து:
"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து
வளர் மொழி வாழிய வே!
3-1-1.
மேலே தந்துள்ள பாடல்களில், தமிழ் இனிமை (மதுரம்) வாய்ந்தது; தமிழ்ச் சொல் உயர்ந்தது ; தமிழ் வானளாவிய உலக மனைத்தும் அளந்தது - அறிந்தது - என்னும் மூன்று செய்திகள் தரப்பட்டுள்ளன. தமிழ் இனிமையான மொழிதான். தமிழ் என்னும் சொல்லுக்குத் 'தமிழ் மொழி' என்னும் பொருள் இருப்பதன்றி, 'இனிமை' என்னும் பொருளும் உண்டு. இதனை,
"தமிழ் தழீஇய சாயலவர் (சீ. சிந்தாமணி-2026)