பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

வரலாறு' (History of Tamil Language and Literature) என்னும் பெயரால், தமிழ்க் கல்வியாளரும் தமிழ் ஆய்வாளரும் வழங்குவது மரபு. பாரதியாரின் பாடல்களில் தமிழ் மொழி வரலாறு பற்றிய சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவை:

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”.

“தேமதுரத் தமிழ் ஓசை"

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"-(பாப்பா பாட்டு-12)

தமிழ் மொழி வாழ்த்து:

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
        வாழிய வாழிய வே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
          வண்மொழி வாழிய வே!
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து
         வளர் மொழி வாழிய வே!

3-1-1.

மேலே தந்துள்ள பாடல்களில், தமிழ் இனிமை (மதுரம்) வாய்ந்தது; தமிழ்ச் சொல் உயர்ந்தது ; தமிழ் வானளாவிய உலக மனைத்தும் அளந்தது - அறிந்தது - என்னும் மூன்று செய்திகள் தரப்பட்டுள்ளன. தமிழ் இனிமையான மொழிதான். தமிழ் என்னும் சொல்லுக்குத் 'தமிழ் மொழி' என்னும் பொருள் இருப்பதன்றி, 'இனிமை' என்னும் பொருளும் உண்டு. இதனை,

"தமிழ் தழீஇய சாயலவர் (சீ. சிந்தாமணி-2026)