பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கருத்து. இப்பாடலில் பொருள் நயத்துடன், இருபொருள் தரும் சொல் நயங்களும் உள்ளன. புலவர் முருகனைச்'சட்டியிலே கொக்கு அவித்த மறவன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 'சட்டி' என்றால் கந்தர் சஷ்டி நாள்; 'கொக்கு' என்றால் மாமரம். சூரபத்மன் மாமரமாய்க் கடலுள் மறைந்துநின்றான். அவனை முருகன் சஷ்டியன்று கொன் றார். இதனையே சட்டியிலே கொக்கு அவித்த மறவன்’ என நயப்படுத்திக் கூறியுள்ளார் புலவர். மேலும் இதில், 'சட்டியிலே கொக்கு ஆக்கி உண்ணும் வேடன்’ என்னும் குறிப்பும் படுகிறது. மற்றும், பாடலின் இறுதியில் உள்ள

'வெட்டிமிளிர் பூவரசை வேலால் வைப்போம்
விளம்பு பெண்ணை வினவியஉன் வேந்தனுக்கே’.

என்னும் தொடரில் பொதிந்துள்ள நயம் சுவைத்துப் பாராட்டத்தக்கது. பெண்ணை என்றால் பனைமரம் 'பெண்ணைக் கேட்டால், அரசை வேலால் வெட்டி வீழ்த்துவோம்’ என்னும் வெளிப்படைப் பொருள் இருக்க, மற் றொரு மறை பொருளும் உள்ளே பொதிந்து கிடக்கிறது. அதாவது, வெட்டிவேர், பூவரசுமரம், வேலமரம், ஆல மரம், பனைமரம் ஆகியவற்றின் பெயர்கள் மறைந்துள் ளன. பெண்ணை அதாவது பனைமரம் கேட்டவர்க்கு வெட்டிவேர், பூவரசுமரம், வேலமரம், ஆலமரம் ஆகிய வற்றை முன்வைப்போம் என்னும் உட்பொருள் மறைந்து நின்று மகிழ்வுறுத்துகிறது.

பனிக்காலக் காட்சி: -

புலவர் மற்றொரு பாடலில் பின்வருமாறு பனிக்காலத்தைச் சுவைபெறப் புனைந்துரைத்துள்ளார். பாடல் இதோ-

     வம்புவிடு மாம்பூக்கள் கருகுங் காலம்
          வரகுமுதல் புன்பயிர்கள் வளருங் காலம்