பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

காணாத கருப்பையூர்

முதல் வீடு

வ்வொரு மனிதனும் பிறந்து வளர்ந்த முதல் வீடு கருப்பை. பெற்ற தாய் தன் பொன்னான மேனியிலே இடுப்புக் குழியிலே யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வைத்துள்ள கருப்பையூரிலே ஒன்பது மாதம் தங்கி வளர்ந்துதான் அவன் இந்த மண்ணுலகத்திற்கு வருகிறான். அந்தக் கருப்பை குழந்தையை வளர்ப்பதற்காக எத்தனையோ சிரமத்தையெல்லாம் மேற்கொள்ளுகிறது.

கருப்பை சுமார் மூன்று அங்குல நீளமுள்ளது. அதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன (9-ம் பக்கத்திலுள்ள படத்தைப் பார்க்க). இரண்டு சூல்பைகளிலிருந்தும் மாறி மாறி அண்டம் வரவும், யோனியிலிருந்து விந்தணுக்கள் உட்புகவும் இவ்வழிகள் உதவுகின்றன.

கருப்பையின் கூடு தடிப்பானது. அதன் உட்புறச் சுவராக அமைந்துள்ள இழையம் மாதம் ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. நைந்து பழையதாய்ப் போன இழையம் மாதவிடாய்க் கழிவுடன் வெளி