பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

விலேயே வேறு ஒன்றையும் பற்றி அலட்டிக்கொள்ளாமல், படத்தை அனுபவித்தான்.

படம் முடிந்தது.

தேசிய கீதமும் முடிந்தது.

தன்னே யாரே தோள் தொட்டு அழைப்பதாக அறிந்தான். திரும்பினான். “மிஸ்டர் ஞானபண்டிதன் ! நீ பலே ஆள் !... அன்னிக்கு டெலிபோனிலே என்னை நீ ஏமாத்திவிட்டதாத்தானே மனப்பால் குடிச்சிட்டிருக்கே ! அதுதான் தப்பு !....உன் குரல்னு புரிஞ்சுக்கிட்டுத்தான் நானும் பேசிக்கிட்டிருந்தேனாக்கும் !... நீயும் நானும் கூடிய சீக்கிரமே மீட் பண்ணுவோம்!.... வரட்டுமா? எனக்கு அவசரமான ஜோலி இருக்குது !...” என்று கொட்டி விட்டு, பிள்ளைப் பூச்சி போலச் சுவடு காட்டாமல் நழுவி விட்டான் !

தேள் கொட்டின உபாதை ஞானபண்டிதனுக்கல்லவா தெரியும் ?