பக்கம்:கற்சுவர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.2.2 - - கற்சுவர்கள்

அங்கே இரண்டு மூன்று அலமாரிகள் நிறையக் காலி 'யான ஸ்காட்ச் பாட்டில்களும், ஜின்பாட்டில்களும், ரம் 'பாட்டில்களும் அடைத்துக் கொண்டு கிடந்தன. ஓர் 'அலமாரியில் இன்னும் வில் உடைக்காத அந்நிய நாட்டு 'விஸ்கி பாட்டில்களும் பிறவும் இருந்தன. இன்னோர் 'அலமாரி நிறையப் பழைய ப்ளேபாய் மேகஸின்களும். வேறு சில நிர்வாணப் படப் பத்திரிகைகளும் நிரம்பிக் கிடந்தன. அப்பாவின் குணச்சித்திரத்தை விளக்கும் கருவங்களாக இவை தனசேகரனுக்குத் தோன்றின. ஒரு வேளை தம்முடைய அந்தரங்க அறையில் அவர் மீதம் வைத்துவிட்டுப் போயிருக்குச் சொத்துக்களே இந்தக் காலி பாட்டில்களும், பழைய பத்திரிகைகளும் மட்டும் தான்ோ என்றுகூடத் தனசேகரனுக்குச் சந்தேகமாயிருந்தது.

"ராஜா இறந்துபோன இரண்டு மூன்று மணி நேரத் 'திலேயே அருகே வந்து அழுது ஒப்பாரி வைக்கிற சாக்கில் 'இளைய ராணிகள் அகப்பட்டதைச் சுருட்டியாச்சு சார்!"

என்றார் காரியஸ்தர்.

"அப்படியே சுருட்டியிருந்தாலும் எங்கே கொண்டு. போயிருக்கப் போறாங்க? இங்கே அரண்மனைக்குள்ளாரத். .தானே வச்சிக்கிட்டிக்கணும் ஒரு சோதனை போட்டா எல்லாம் தானே வெளியே வருது' என்றார்.மாமா.

"அதெல்லாம் எங்கே தேடினாலும் உங்களுக்கு ஒரு. துரும்புகூடக் கிடைக்காது. எல்லாம் இதுக்குள்ளார நூறு: மைல் இருநூறு மைல் கூடத் தாண்டிப்போயிருக்கும்' என்று:சிரித்துக்கொண்டே நிதானமாக மாமாவுக்குப் பதில்

சொன்னார் காரியஸ்தர். x - -

பெட்டிகள், சூட்கேஸ்கள் கைப்பைகள் எல்லாவற்றை யும் குடைந்து பார்த்துக் கடைசியில் அரண்மனைக் கருவூலத்தில் உள்ள பண்டங்களின் பட்டியல் அடங்கிய ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பல டைரிகளையும் எடுத்து. விட்டார் மாமா. கருவூலப் பட்டியல் புத்தகத்தில் நடுவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/124&oldid=553096" இலிருந்து மீள்விக்கப்பட்டது