104
கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி
தில் கூழ்பெற்று உண்கின்றது. கூழ் ஒழுகும் நிலையைப்பார்க்க கலத்தைக் கவிழ்த்துப் பார்க்கின்றது! கூழெல்லாம் கொட்டிப்போகிறது!
பொல்லா ஓட்டைக் கலத்துக்கூழ்
புறத்தே ஒழுக மறித்துப்பார்த்து
எல்லசங் கவிழ்த்துத் திகைத்திருக்கும்
இழுதைப் பேய்க்கு வாரிரே[1]
- [பொல்லா-கெட்ட மறித்துப்பார்த்து தலைகீழாகத்
திருப்பி:இழுதை-அறிவற்ற]
என்பது கவிஞரின் சொல்லோவியம். ஒரு பேய்க்குப் பாத்திரம் கிடைக்கவில்லை. அது போர்க்களத்தில் இறந்துகிடந்த யானைத்துதிக்கையின் ஒருதுணியை பல்லின்மேல் நிறுத்திக்கொண்டு மறுபக்கத்தில் கூழை வார்க்கும்படி வேண்டி நிற்கின்றது.
துதிக்கைத் துணியைப் பல்லின்மேல்
செவ்வே நிறுத்தித் துதிக்கையின்
நுதிக்கே கூழை வாரென்னும்
தோக்கப்பேய்க்கு வாரீரே[2]
- [துணி-துண்டம்,செவ்வே-செவ்வையாய், நுதி.நுனி)
என்பது இப்பேயின் நிலையைக்காட்டும் சொற் சித்திரம்.
அழுகைச் சுவை
போர்க்களத்தில் காணும் நிகழ்ச்சிகள் பல அழுகைச்சுவை பயக்கவல்லவை துன்பத்திலும் இன்பத்தைக் காணுவதுதான் ஆன்மாவை உணர்வது என்று அறிஞர் கூறுவர். இச்சுவையை மேல்