பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடைதிறப்பின் உட்பொருள்

35


பாடுகின்றனர். இதைக் கருதி நூலினைப் படிப்போர் நூலில் காட்டும் பேருண்மைகளையும் பிறவற்றையும் அறிந்து பெரும்பயன் எய்துகின்றனர். நூலிற்கு அகப்பொருட் சுவையூட்டுவது கொயினா மருந்திற்குச் சருக்கரைப்பாகு ஊட்டிச் செய்வது போன்ற முறையாகும். இந்த முறையை மேற் கொண்டே சயங்கொண்டாரும் போரைக் குறிக்கும் தம் நூலில் கலவிப் போரையும் காட்டினார் என்று கொள்ளுவது ஏற்புடைத்தாகும்.