வரலாற்றுக் கருவூலம்
61
என்ற இடத்தே பொருது வெற்றி கொண்டதுதான் இவனது கன்னிப்போராகும். [1] இதனைக் கவிஞர்,
மனுக்கோட்டம் அழித்தபிரான்
வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்ட நமன்கோட்டம்
பட்டதுசக் கரக்கோட்டம்[2]
- [மனு-மனிதர்கள்; கோட்டம்-தீநெறி; புருவத்தனு-புருவவில்; நமன்-யமன்]
என்று குறிப்பிடுகிறார். வயிராகரத்தை எரியூட்டியதை 'திகிரி புகைஎரிகு விப்ப வயிரா, சுரமெரி மடுத்து'[3]என்ற அடியால் பெற வைக்கிறார். இதையே எங்கவராயன் வாயில் வைத்தும்,
மாறு பட்டெழு தண்டெழ வத்தவர்
வேறு பட்டதும் இம்முறையே யன்றோ?"[4]
என்று பின்னால் குறிப்பிடுகிறார் கவிஞர்.
குலோத்துங்கன் துங்கபத்திரை நதிக்கரையில் நடைபெற்ற போரில் குந்தள அரசனையும் அவன் தம்பியையும் வென்று அவர்கள் தலைநகரமாகிய கலியாணபுரத்தைக் கைப்பற்றிய செய்தியும்[5] மீண்டும் அளத்திப் போர்க்களத்தில் குந்தள அரசனை வென்ற செய்தியும் நூலில் குறிப்பிடப் பெறுகின்றன. மைசூர் நாட்டைச் சேர்ந்த நவிலையில் பல சிற்றரசர்களை வென்று பல யானைகளைக் கைக் கொண்டமை,
கண்ட நாயகர் காக்கும்ந விலையில்
கொண்டதாயிரம் குஞ்சரம் அல்லவோ[6]