பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
94



ஐக்கிய மாநிலத்தில் உள்ள கன்னோசி நாட்டுக்காவலனை குலோத்துங்கன் தன் ஆருயிரனைய நண்பனாகப் பெற்றிருந்தான். கங்கையாறு பாயும் கன்னோசி நாட்டான், காவிரியாறு பாயும் கன்னித்தமிழ் நாட்டிற்கு வந்தான். குலோத்துங்கனின் கோநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனுக்குத் தன் வருகையின் நினைவுச் சின்னமாய், நிவந்தங்கள் பல அளித்துக் குலோத்துங்கனைச் சிறப்பித்தான். வந்தானை வர வேற்று விருந்தளித்ததோடு அமையாது குலோத்துங்கன், சூரியனுக்குக் கோயில் கட்டி வழிபடும் கன்னோசி நாட்டாரின் வழக்கத்தைத் தமிழ்நாட்டிலும் வழங்கச்செய்து, சோணாட்டிலும் சூரியனுக்குக் கோயில் கட்டி, அதற்குக் குலோத்துங்க சோழ மார்த்தாண்டன் கோயில் எனத் தன் பெயரால் பெயர் சூட்டி, வழிபாட்டிற்கு வேண்டும் நிவந்தங்களையும் வழங்கினான்; சூரியனார் கோயில் என இக்காலத்தில் வழங்கப்பெறும் அக் கோயிலில், கங்கைக் கரைக் கடவுளாகிய விசுவநாதருக்கும், விசாலாட்சி அம்மைக்கும் வடிவங்கள் சமைத்துவைத்து, வழிபாட்டிற்கு வழிவகுத்தும் வைத்தான். கங்கைக் கரையான்பால், காவிரிக் கரையான் காட்டும் நட்பின் பெருமை தான் என்னே!

சுங்கம் தவிர்த்தமை: கன்னிக் காவிரியின் பாய்ச்ச லால், சோணாடு பொன்னிவளநாடு என்னும் பேரும் புகழும் பெறும் வகையில் வளங் கொழித்தது என்றாலும், நெல் வளம் ஒன்றால் மட்டும் நாட்டின் செல்வநிலை சிறந்து விடாது; அந்நாட்டின் பொன்வளமும் பெருக வேண்டும் என அறிந்து, அப்பொன் வளம் தரும் வெளி நாட்டு வாணிக வளர்ச்சிக்காகவே, புகார் நகரைக் கண்டு, அதனால் பெருந்திருமாவளவன் எனும் புகழ்மிக்க ழன் வழியில் வந்தவன் குலோத்துங்கன். அதனால் வற்றாவளம் தரும் அவ்வாணி