உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் “ஊரைச் சூழ்ந்த நீர்நிலைகளிலும் வயல்களிலும் பொழில் களிலும் வண்டுகள் இன்னொலிகளை எழுப்பிக் கொண்டுள்ளன; கண்ணுக்கும் செவிக்கும் விருந்துட்டும் சூழ்நிலையை யுடையது சிறுபுலியூர்' என்கிறார். நீர்நிலைகளில் வண்டுகள் ஒலிக்குமோ? என்ற வினா எழுகின்றது. நீர்நிலைகளில் மதுவோடு கூடிய வெள்ளப் பெருக்கம் இருக்குமாதலால், மதுவின் நசையினால் வண்டுகள் வந்து மொய்க்கும். கம்பநாடனின் பாடல் ஒன்று இக் கருத்தை அரண் செய்வதுபோல் அமைகின்றது. ஐக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து ஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே தேக்கு எறிந்து வருதலின் தீம்புனல் வாக்கு தேனுகர் மாக்களை மானுமே." (வரம்பு - எல்லை; தேக்கு - ஏப்பம்; எறிந்து - வீசிக் கொண்டு; வாக்கும் - வார்க்கும்; தேன் - கள்; மானும் - ஒத்திருக்கும்) என்ற பாடலில் இக்கருத்தைக் காட்டுவான். கட்குடியரையும் ஆற்று வெள்ளத்தையும் ஒப்பிட்டுக் காட்டும் பாடல் இது கட்குடியரைக் கூறுமிடத்து: ஈக்கள் வண்டோடு மொய்த்தல் - அவரிடத்துள்ள கள் நாற்றத்திற்காக ஈக்களும் வண்டுகளும் மொய்க்கும்; வரம்பு இகத்தல் - தமது குலம், குடிப்பிறப்பு என்ற இவற்றுக்கு ஏற்ற ஒழுக்கத்தைக் கை விடுவர்; ஊக்கம் மிகுதல்உற்சாகம் மிகுந்தவராயிருப்பர்; உள் தெளிவு இன்மை - மனம் தெளிவு பெறாதிருப்பர்; தேக்கு எறிதல் . சதா ஏப்பம் விட்டுக் 47. கம்பரா. பால. ஆற்றுப் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/89&oldid=775687" இலிருந்து மீள்விக்கப்பட்டது