பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

கலீலியோவின்

வராகியும் ஆயுள்தண்டனை பெற்றவர்; மேலும் என்னென்ன துன்பங்கள் நேருமோ என்று அவர் வேதனைப்பட்டார்; மனம் நொந்து நைந்தார்!

சீயன்னா நகர் சென்ற கலீலியோவுக்கு வறுமை நோய் அவரைப் பற்றிக் கொண்டது. அதனால், அவர் மட்டும் அல்லல்களை ஏற்கவில்லை! குடும்பமே வறுமை நெருப்பிலே சிக்கி கருகிய நிலையில் வாடியது!

அதனால், அவருடைய உடல் மிகவும் பலவீனமானது; மெலிந்தது உடல்! உருக்குலைந்தது அழகு! சோர்ந்தது உள்ளம்; சுருங்கியது தோல்; பற்றியது அவரைப் பெரு தோய்; இறுதியாக அலைந்தார் தன்னையும் மறந்து!

அவருக்கு மட்டுமன்று பெருநோய் அவருடைய அன்பு மகளுக்கு வந்தது பசிநோய்! அந்தப் பெருநோயால் மரணம் விழுங்கியது அவளை!

கலீலியோ வாழ்க்கையில் வறுமையும் துன்பமும் வாட்டி எடுத்த போது எல்லாம் அவரது அருமை மகள் உறுதுணையாக இருந்தாள் ஆறுதல் கூறினாள்!

அப்படிப்பட்ட பொறுமை மிக்க, பொறுப்புள்ள, தந்தை மீதும், அவரது கண்டு பிடிப்பின் உழைப்புக்குப் பேருதவியாக இருந்த பிரிய மகள் அகால மரணத்தால் இறந்த பின்பு, கலீலியோ வாழ்க்கையையே வெறுத்தார்; விரக்தியால் எதன் மீது பற்றற்று வாழ்ந்தார்; ஏன் பிறந்தாய் மகளே என்னை நடுவீதியிலே நிறுத்தவா? மகளே என்று அழுது அழுதுக்கதறி ஆறாத்துயருற்றார்!

அன்று முதல் உணவை மறந்தார்; உறக்கத்தை மறத்தார்; உணர்வற்ற நடைப் பிணம்போல வாழ்ந்தார்! மகள் சோகம் ஒர் புறம்; போப் ஆண்டவர் ஆணவ ஆணை மறுபுறம்; உண்மையின் உறுத்தல் உணர்வு உட்புறம்; உலகுக்கு நமது அறிவைத் தியாகம் செய்தும்