பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

683

இந்தியா

1950 1951 1955 1956
நிலையங்கள் படுக்கைகள் நிலையங்கள் படுக்கைகள்
உடல்நல நிலையங்கள் 37 4161 46 5656
மருத்துவச் சாலைகள் 48 3077 50 4814
மருத்துவச் சோதனைச் சாலைகள் 127 2323 180 2652
பீ. சீ. ஜீக் குழு 73
137

மலேரியாவால் ஆண்டுதோறும் 10 கோடி மக்கள் துன்புறுகின்றனர். 20 இலட்சம் பேர் இறக்கின்றனர். இதை நீக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளில் 15 கோடி ரூபாய் செலவு செய்து, வேண்டுவன செய்யத் திட்டம் செய்துள்ளது.

குஷ்டநோயால் வருந்துவோர் தொகை சுமார் பத்து இலட்சமாகும். இந் நோய் மிகுந்துள்ள இராச்சியங்கள் அஸ்ஸாம், பீகார், ஐதராபாத், சென்னை, ஒரிஸ்ஸா, ஆந்திரா, திருவிதாங்கூர் கொச்சி, மேற்கு வங்காளம். இந் நோய் பற்றிய ஆராய்ச்சி கல்கத்தாவிலுள்ள வெப்ப வலய மருத்துவ நிலையத்தில் நடைபெறுகிறது.

மேகநோய் நகரங்களிலேயே மிகுதி. பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களிலுள்ள மக்களுள் 6.7% பீடிக்கப்பட்டுளர். காச்மீரத்திலிருந்து அஸ்ஸாம் வரையுள்ள குன்றுப்பகுதிகளிலும் மிகுதியாகப் பரவியுள்ளது. இந்திய அரசாங்கம் இதைத் தடுப்பதற்கு வேண்டிய மருந்து உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

நிதியாதாரம்

இந்தியாவின் அரசியல் கூட்டாட்சி முறையில் அமைவதால், அதன் நிதியும் கூட்டு முறையிலேயே அமைகின்றது. மத்திய அரசாங்கமும் இராச்சிய அரசாங்கங்களும் தங்கள் கடமைகளைப் பிரித்து வகுத்திருப்பது போலவே, தங்கள் வருவாய் இனங்களையும் பிரித்துக் கொண்டுள்ளன.

மத்திய அரசாங்கத்தின் வருமானம், சென்ற சில ஆண்டுகளில் இருந்த நிலை வருமாறு:

ஆண்டு கோடி ரூபாய்
1938-39 73.90
1948-49 319.94
1949-50 311.54
1950-51 357.00
1951-52 459.99
1952-53 (திருத்திய மதிப்பு) 372.29
1953-54 (வரவு செலவுத் திட்ட மதிப்பு) 370.44

1953-54 வரவு செலவுத் திட்ட மதிப்பின்படி வருமான இனங்கள் வருமாறு :

வருமான இனம் கோடி ரூபாய்
1. சுங்கம் 170.00
2. யூனியன் கலால் வரி 94.00
3. கார்ப்பொரேஷன் வரி 36.62
4. வருமான வரி (மத்திய அரசாங்கத்தின் பங்கு) 68.48
5. நாணயம் (ரிசர்வ் பாங்கு இலாபம் உட்பட) 459.99
6. ரெயில்வே தரும் உதவி 7.65
1953-54 துறைமுகங்கள், தந்தி இலாகா 0.40

சுங்க வருமானம் 1951-52-ல் 31.69 கோடியாக உச்சநிலை அடைந்து பின்னர் இறங்கிற்று. இவ்வருமானத்தில் பெரும்பகுதி இறக்குமதியாகும் பலவகைப் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியாகும். அப் பொருள்களுள் ஆடம்பரப் பொருள்களின் வரி விகிதம், மற்றப் பொருள்களின் வரி விகிதத்தைவிடக் கூடியதாகும். ஏற்றுமதி வரி கச்சாப்பொருள்களுக்கும் விவசாயப் பொருள்களுக்கும் விதிக்கப்படுகிறது.

யூனியன் கலால் வரிகள் 1934 முதல் சர்க்கரைக்கும் தீப்பெட்டிக்கும், 1938-39 முதல் மண்ணெண்ணெய்க்கும். 1943-44 முதல் தாவரநெய்க்கும், 1944-45 முதல் தேயிலை, காப்பிக்கொட்டை, பாக்கு ஆகியவற்றுக்கும் விதிக்கப்படுகின்றன. மேலும், மோட்டார் ஸ்பிரிட்டு, டயர், குழாய், புகையிலை ஆகியவற்றிற்கும் வரி விதிக்கப்படுகின்றது. 1947-ல் நீக்கப்பெற்ற உப்புவரி, இந்தியாவில் மிகப் பழைய கலால் வரியாகும். இவ்வரியால் ஆண்டுதோறும் 8-10 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது.

வருமான வரி 1886-ல் நிலையான வரியாயிற்று. மத்திய அரசாங்கம் இதனை வசூலித்து இராச்சியங்களுடன் பங்கிட்டுக்கொள்கின்றது. அண்மைவரையில், 1936-ல் ஏற்பட்ட நீமேயர் தீர்ப்புப்படி (Niemeyer Award) இராச்சியங்கள் 50% வரியைப் பெற்றுக்கொண்டிருந்தன. 1952-ல் நிறுவப்பெற்ற நிதிக்கமிஷன் சிபார்சுப்படி 1953-54 முதல் இராச்சியங்கள் 55% பெறுகின்றன. இந்திய வருமான வரி முறையின் முக்கிய அமிசங் களாவன : (I) 1939-ல் படி (Step) முறையை நீக்கித் தட்டு (Slab) முறை அமைக்கப்பட்டுள்ளது. படி முறையின்படி ரூ. 3,000 வரை வருமானமுள்ளவர் வரி தரவேண்டியதில்லை என்றும், ரூ. 3,000 முதல் ரூ.4,000 வரை வருமானவரி ரூ.1க்கு ஓர் அணா என்றும், ரூ.4,000 முதல் ரூ. 5,000 வரை ரூபாய் ஒன்றுக்கு இரண்டணா என்றும் இருந்தால் ரூ. 3,900 வருமானமுடையவர் 900 அணாவும், ரூ. 4,010 வருமானமுடையவர் (1010X2) அதாவது 2020 அணாவும் தர வேண்டும். ஆனால் தட்டு முறைப்படி அவர்கள் முறையே 900 அணாவும், (1000+20) அதாவது 1020 அணாவும் தந்தால் போதும் (பார்க்க : வருமானவரி). (2) வருமானம் கிடைக்குமிடத்திலேயே வசூலித்தல். (3) கூட்டு வருமானத்தை அதாவது கணவன் மனைவி இருவருக்கும் வருமானம் இருந்தால், அவற்றை ஒரே மொத்த வருமானமாகப் பாவித்து வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள். (4) 1942-43 முதல், வருமானத்தைச் சொந்தமாகச் சம்பாதித்தது, அல்லாதது என இருவகையாகப் பிரித்து, முந்தினதற்கு நிவாரணம் தருதல், (5) சமய, தரும நிலையங்களிடம் வசூலிப்பதில் விதிவிலக்கு அளிப்பது போன்ற பல விதிவிலக்குக்கள் ஏற்படுத்துதல். (6) கடந்த ஆண்டு வரை (1952-53) வரி கொடுக்க வேண்டாத வருமான எல்லை, தனி நபருக்கு ரூ. 3,600 ஆகவும், இந்து ஏக குடும்பங்களுக்கு ரூ. 7,200 ஆகவும் இருந்தது. 1953-54 முதல் மக்களுக்குச் சிறிது நிவாரணம் தருவதற்காகவும், வரி வசூலிக்கும் நிருவாகத்துக்குச் சிறிது வசதி தருவதற்காகவும், இந்த எல்லைகள் முறையே ரூ. 4,200 ஆகவும் ரூ. 8,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் வசூல் செய்யும் வருமான வரியில் மிகை வரியும் (Super-tax) மேல் வரியும் (Surcharge) அடங்கும்.

வியாபாரக் கூட்டுநிலைய வரி (Co-operation tax) முற்றிலும் மத்திய அரசாங்க வருமானமாகும். அதில் இராச்சியங்களுக்குப் பங்கு கிடையாது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது முதல், வருமான வரியிலிருந்து கிடைக்கும் தொகை ஒழுங்காகக் கூடிவந்து, 1951-52-ல் ரூ. 134.74 கோடியாக