பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அணுசக்தியும் மருத்துவமும் தில் அதில் புற்றுப்புண் ஏற்பட்டால் அயோடினுக்கு அணுசக்தி ஏற்றி உள்ளுக்குக் கொடுத்தால், அந்த அயோடின் உடம்பின் மற்றப் பாகங்களைவிடத் தைராய்டு சுரப்பியிலேயே அதிகமாகச் சேருவதால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் புற்றுப்புண் விரைவில் ஆறிவிடுகிறது. புற்றுப்புண் இல்லாமல் தைராய்டு சுரப்பி அதிகப்பட்டு, தன் சக்தியை உடலில் உண் டாக்குமானால்,அதனால் கெடுதல் ஏற்படலாம். அது ரோ டாக்ஸிக் கோஸிஸ்' (Thyrotoxicosis) எனப் படும். அப்படி ஏற்படும்போது அந்நோயாளிகளுக்கு அதிகப் பசியும், அதனால் அளவுக்கு மீறி அவர்கள் சாப்பிடுவதும், குடலில் அசைவு வேகமாய் இருப்ப தால் அடிக்கடி மலம் கழிவதும், அதிகம் சாப்பிட்டும் எடை குறைவதும், வழி பிதுங்குதலும், உடலில் வியர்வை அதிகமாகத் தோன்றுதலும், உடல் மெலித லும் ஆகிய அறிகுறிகள் காணப்படும். இவர்களுக்கு அயோடின் கொடுத்தபின் இக்கோளாறுகள் எல்லாம் சிறிது அடங்கும். இருந்தாலும்,15,20 நாட்களுக்குப் பின் மறுபடியும் நோய் முன்போலவே தோன்றும். அதனால் இவர்களுக்கு ரணசிகிச்சை செய்வது வழக்கம். இவர்களுக்கும், அணுசக்தி ஏற்றப்பட்ட ரேடியோ அயோடின் கொடுக்கலாம். ஆனால் இளமை யானவர்களுக்கு இப்படிக் கொடுத்தால் புற்றுப்புண் ஏற்படவும் கூடும். ஆகையால், இம்மாதிரி நோயாளி களுக்கு, 55 அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர் களாய் இருந்தால்தான் ரேடியோ அயோடின் கொடுக் கப்படுகிறது. அதற்குக் குறைந்த வயது உள்ளவர் களுக்கு மருந்தின் மூலமாகவும், ரண சிகிச்சையின் மூல மாகவும் எக்ஸ்-கதிர் மூலமாகவும் சிகிச்சை செய்யப் படுகிறது. கிருமிகள் உடலைத் தாக்குவதால் இரத்தத்தில் வெள்ளணுக்கள் அதிகப்படும். அப்படி எவ்விதமான கிருமிகளும் தாக்காமலே இரத்த வெள்ளணுக்கள் தாமாகவே மேலும்மேலும் பெருகிக்கொண்டே போகு மானால், அந்த நோய்க்கு 'லுக்கீமியா' என்று பெயர். சாதாரணமாக இரத்தத்தில் நான்கு விதமான வெள்ளணுக்கள் இருக்கின்றன. எந்த வகையான வெள்ளணு அதிகப்படுமோ, அதன் பெயரைக் தொண்டே அந்நோய் அழைக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஒருவகை வெள்ளணுவின் பெயர் பாலி மார்போ நூக்லியர் லுக்கீமியா' ஆகும். இந்த நோய் ஏற்பட்டால் வயிற்றிலிருக்கும் மண்ணீரலும், கல்லீர லும் பெருத்துவிடும். பசி எடுக்காது. வெள்ளணுக் கள் அதிகமாக இருப்பதால், சிவப்பு அணுக்கள் உற் பத்தியாவதற்கே இடமில்லாமல் போய்விடவே, நாளடைவில் இரத்தசோகை ஏற்படக்கூடும். இரத்த சோகையினால், நாளடைவில் பலவீனமும் காணப்படும். இது, மற்ற இடங்களில் எப்படிப் புற்றுப்புண்ணோ, அம்மாதிரியாக இரத்தத்தில் ஏற்பட்ட புற்றுப்புண் என்று கருதப்படும். மற்ற இடங்களில் புற்றுப்புண் ஏற்பட்டால், அந்த இடத்தில் ரணசிகிச்சை செய்து குணமாக்கலாம்; அல்லது ஆற்றல் மிகுந்த எக்ஸ்- கதிர் (Deep X-ray) கொண்டோ அல்லது ரேடியத்தி னாலோ குணப்படுத்தலாம். ஆனால் இந்த நோய் உடல் முழுவதும் சுற்றிவரும் இரத்த அணுக்களிலேயே நோயை உண்டாக்குவதால், இதற்கு இரத்தத்தி லேயே கலந்து செல்லக்கூடிய ஒரு அணுசக்தி வாய்ந்த மருந்தைப் பயன்படுத்தினால்தான் குணம் காணப்படும். இதற்கு, 'ரேடியோ ஐசோடோப்பு பாஸ்பரஸ்-82' என்னும் அணுசக்தி மருந்தை நேராக இரத்தத்திலே செலுத்தினால் குணம் ஏற்படும். இதில் முக்கியமான நன்மை என்னவென்றால், நோயாளி பெரிய மருத்துவ சாலையில் இருக்கவேண்டியதில்லை; வீட்டிலேயே இருந்து சிகிச்சை செய்துகொள்ளலாம், இம்மருந்தைச் 12 அத்தார் சிறிய கிராமங்களுக்கும், அவற்றின் சுற்றுப்புறங்களுக் கும் கூட அனுப்பலாம். ஆனாலும் இம்மருந்து ஒரு முறை கொடுத்தபின், இரத்தத்தில் சிவப்பு, வெள்ளை அணுக்கள் அதிகம் குறையாமல் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவேண்டும். ஓரளவுக்குக் கீழே குறைந்தால், அதனால் உடலுக்குக் கெடுதல் ஏற்பட லாம். அப்படிக் குறையுங் காலத்தில் அவர்களுக்கு இரத்தம் கொடுக்கவேண்டும். இரத்த அணுக்கள் குறையாமல் காக்கக்கூடிய மருந்துகளையும் பயன் படுத்தவேண்டும். சாதாரணமாக 3 அல்லது 6 மாதங் கள் வரையில் நோய் குணமடைந்து இருந்து, மறு படியும் ஏற்படும். அப்படி உண்டாகும்போது மீண்டும் அணுசக்தி வாய்ந்த ரேடியோ ஐசோடோப்பு பாஸ்பரஸ்ஸைக் கொடுக்கலாம். ஒருமுறை கொடுத்த அனுபவம் கண்டிருப்போமானால், அதிலிருந்தே எவ் வளவு ரேடியோ ஐசோடோப்பு பாஸ்பரஸ் வேண்டு மென்று நிருணயிக்க முடியும். இக்காலத்தில் சிகரெட்டு பிடிக்கும் பழக்கம் பெருகியிருப்பதால் சுவாசப் பையில் புற்றுநோய் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, பல மடங்கு மிகுதியாகக் காணப்படுகிறது. 20 ஆண்டு களுக்கு முன் சென்னை அரசாங்கத் தலைமை மருத்துவ சாலையில் ஆண்டுக்கு ஒரு நோயாளிக்கே இம்மாதிரி நோய் காணப்பட்டது. இப்போது சுமார் 30 பேருக்குக் காணப்படுகிறது. அதாவது 80 மடங்கு அதிகமாகி யிருக்கிறது. இந்த நோய் சுவாசப் பையைச் சுற்றி இருக்கும் பை போன்ற 'புளூரா' என்ற உறுப்பைத் தாக்கும்போது, மார்பின் உட்புறத்தில் இரத்தம் தோய்ந்த நீர் ஏற்படுகிறது. இந்த நீர் உண்டானால், சுவாசப்பைக்குப் போதுமான இடமில்லாமல் போய், மூச்சு விடுவதற்குச் சிரமம் ஏற்படுகிறது. இதற்குச் சிகிச்சை செய்வது சிறிது கடினமே. ஆனாலும், இக் காலத்தில் இந்த நீரை அகற்றிவிட்டு உள்ளே 'ரேடியோத் தங்கத்தை'ச் செலுத்தி மறுபடியும் நீர் சுரக்காமல் தடுத்து நோயாளி உயிரோடு இருக் கும் வரையில் அதிகச் சிரமம் இன்றி இருக்க வழி வகுக்கப்படுகிறது. ரெ.சு. அத்தார் (Attar?-1229) ; ஒரு பாரசீகக் கவி. இயற்பெயர் ஷேக் பரீதுத்தீன் (Shaik Fariduddin). நீஷாபூரில் பிறந்தவர். இமாம் ரிஜா என்ற ஒரு முஸ்லிம் ஞானியின் திருவருளை நாடி அவருடைய சமாதிக்கருகில் 18 ஆண்டுகள் தவமிருந் தார். பிறகு பாரசீகத்திலுள்ள ரை, கூபா இவ்விடங் களுக்கும், டமாஸ்கஸ், மக்கா, மதீனா இவ்வூர்களுக் கும், எகிப்து, இந்தியா இந்நாடுகளுக்கும் யாத்திரை செய்து இறுதியில் நீஷாப்பூருக்குத் திரும்பினார். அவ ருடைய தந்தையைப் போலவே அவரும் மருத்துவத் தொழிலை மேற்கொண்டிருந்தார். அத்தார் என்ற சொல் மருத்துவன் அல்லது மருந்து விற்பவன் என்று பொருள்படும்; ஆகையால் அப் புனைபெயரை ஏற்றார். அத்தாருடைய உள்ளம் 'சூபிதத்துவம்', அதாவது உள்ளுணர்வுத் துறையையே நாடிற்று. எனினும் அவர் துறவி அல்ல. மருத்துவத் தொழிலில் பொன்னையும் புகழையும் ஈட்டினார். தம்முடைய மருந் துக்கடையில்தான் அவருடைய புகழ்பெற்ற நூல் களான 'முசீபத் நாமா' (நோய்களைப் பற்றியது) 'இலாஹி நாமா' (கடவுளைப் பற்றியது) இவ்விரண்டும் எழுதப்பெற்றன. இவையன்றி அவர் 'பந்த நாமா' (அறிவுரை நூல்), 'மன்திக்குத் தைர்' (பறவைகளின் சிந்தனைகள்) ஆகிய இரு வேறு நூல்களையும் இயற்றி யுள்ளார். மன்திக்குத் தைர் ஒட்டுவமை யால் (Allegory) ஆனது. இந்நூலில் பறவைகள் எல் லாம் 'சீமூர்க்' என்ற மிகவும் அழகியதும், யாராலும் அணி