பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடக்கமாய் நாட்டை ஆண்ட அண்ணாவின் நிழலே! வாங்கும் வடக்கிலே தெற்கை வைத்து வாதிடும் நிதியே! நம்மை ஒதுக்கினார் தம்மைத் தேர்தல் ஊஞ்சலி லிருந்து தள்ளிப் படுக்கையில் படுக்க வைத்துப் பார்த்திட்ட தலைவர் நீங்கள்!

தேரோடும் கோயில் சென்று தேவாரம் பாடிடாத ஆரூரர்; ஆளும் கட்சி அரசியல் அப்பர்; தீமை தாராத கூட்டணிக்குச் சம்பந்தர்;எதிர்ப்பை எல்லாம் கூரான மதிநுட்பத்தால்

குடைசாய்க்கும் முதல்வர் நீங்கள்! இப்போது முதல்வராக இருக்கின்றீர் எனினும், நீங்கள் எப்போதும் கலைஞர் ஈட்டி எழுத்தாளர்! பெரும்பேச் சாளர்! பொய்ப் போர்வைக் கதைக்குள் துரங்கும்புராணத்தின் பகைவர்! நீங்கள் முப்பாவின் முதற்பால்! கொத்து முத்தமிழ் உமக்குத் தாய்ப்பால்!