உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைத்தொட்டி . வீதியோரத்தில் அந்த மாடி வீட்டுக்குக் கீழேதான் நான் நீண்ட நாட்களாகத் தவம் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தவம் எந்தக் கடவுளையும் வரவழைத்து அவர்களிடம் ஏதாவது அபூர்வமான வரங்கள் வாங்கவேண்டும் என்பதற்காக அல்ல! அகிலத்தைக் கட்டியாள வேண்டுமென்று அரசர்கள் பலர் தவ மிருந்தும் தன்னை அழிப்பார் யாருமிலர் என்ற நிலை ஏற்பட வேண்டுமென்று அசுரர்கள் கொடிய தவங்களை மேற் கொண்டதும்; சாபங்களின் மூலம் பகைவர்களைப் பழிவாங்குகிற வரங்களைப் பெறுவதற்கு முனிவர்கள் தவத்தில் முனைந்ததும் எனக்கு நேற்றுத்தான் விவரமாகத் தெரிந்தது. தவம் என்றால் ஒரே நினைவுடன் வேறு எதையும் பற்றிய சிந்தனையும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து அன்ன ஆகாரமின்றி ஆண்டவனைக் காணத் துடிப்பது; அவன் வந்தபிறகு அவன் வந்தபிறகு தேவையைக் கேட்பது ! என்னைப் பொருத்த வரையில் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்து இருப்பது ஒன்றைத் தவிர ; தவத்துக்குரிய வேறு அடையாளங்கள் எதுவுமே இல்லை. அப்படித் தவத்தில் ஈடுபட்டவர்களே கூட ஒரே நிலையில் நினைவைச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். யார் ; எங்கே ; எப்பொழுது தவம் செய்கிறார்கள் என்று அலைந்து திரிந்து கண்டுபிடித்து அவர்களது தவத்தைக் கெடுப்பதற் காகவே தேவலோகத்தில் ஒரு பெண்கள் பெண்கள் படை தயாராக இருக் கிறது. அதில் குறிப்பிடத்தக்க நட்சத்திரங்கள் மேனகை,